fbpx

அவமதித்த ஆளுநர்..!! ஜனாதிபதியை சந்திக்கும் திமுக..!! அடுத்தடுத்த நகர்வுகளால் அரசியலில் பரபரப்பு..!!

ஆளுநர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு-விடம் திமுக இன்று முறையிட உள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு தயாரித்துக் கொடுத்த அறிக்கையில் இடம்பெற்ற சில பகுதிகளை படிக்காமல் தவிர்த்தார். இதனால், ஆளுநருக்கு எதிராக, முதலமைச்சர் முக.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தை முதலமைச்சர் வாசித்துக் கொண்டிருக்கும் போதே, ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். தமிழ்நாடு அரசின் உரையை முழுமையாக படிக்காதது, பேரவையில் தேசிய கீதம் இசைக்கும் முன்பாகவே ஆளுநர் வெளியேறியது உள்ளிட்ட விவகாரங்களை அவை விதிமீறல்களாக திமுக கையில் எடுத்துள்ளது.

அவமதித்த ஆளுநர்..!! ஜனாதிபதியை சந்திக்கும் திமுக..!! அடுத்தடுத்த நகர்வுகளால் அரசியலில் பரபரப்பு..!!

இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு-விடம் இன்று முறையிட திமுக அரசு திட்டமிட்டுள்ளது. அப்போது, ஆளுநரை திரும்பப் பெறுமாறு வலியுறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு ஆகியோர் டெல்லி விரைகின்றனர். இருப்பினும், குடியரசுத் தலைவரை சந்திப்பதற்கான நேரம் உறுதியாகவில்லை.

Chella

Next Post

அஜாக்கிரதையாக இருந்த பள்ளி வேன் ஓட்டுநர்.. சக்கரத்தில் சிக்கி 4 வயது சிறுமி பலி.!

Wed Jan 11 , 2023
கர்நாடக மாநிலத்தில் உள்ள பகுதியைச் சேர்ந்த சுவாமி என்பவருக்கு உமா என்ற மனைவியும் ரக்ஷா என்ற நான்கு வயது மகளும் இருக்கின்றனர். ரக்ஷா கனகபுரா பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்துள்ளார். இத்தகைய நிலையில், பள்ளி முடிந்து ரக்ஷா வேனில் வீட்டிற்கு வந்தார். அப்போது வேனின் கதவு தானாகவே திறந்து கொண்டது. இதை கவனிக்காத ஓட்டுநர் வாகனத்தை வேகமாக இயக்கியுள்ளார். ஒரு வளைவில் திரும்பிய போது […]

You May Like