fbpx

தீவிரமடைந்த பருவமழை..! ஒகேனக்கல்லில் மீண்டும் வெள்ளப்பெருக்கு..! எச்சரிக்கை

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 75 ஆயிரம் அடியாக அதிகரித்துள்ளதால், மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கேரளா மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதனால், கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பியுள்ள நிலையில், கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை நிலவரப்படி 50,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 75 ஆயிரம் அடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்கவும், குளிக்கவும் இரண்டாவது நாளாக தடை விதித்துள்ளது.

தீவிரமடைந்த பருவமழை..! ஒகேனக்கல்லில் மீண்டும் வெள்ளப்பெருக்கு..! எச்சரிக்கை

பொதுமக்கள் கால்நடைகளை ஆற்றின் நடுவே அழைத்துச் செல்லவும், மீன்பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவால் பிரதான அருவி செல்லும் நடைபாதை பூட்டப்பட்டு, காவிரி கரையோரப் பகுதிகளில் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தின் அளவுகளை மத்திய நிறுவனத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Chella

Next Post

BEL நிறுவனத்தில் Diploma முடித்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு…! மாதம் 8,000 ரூபாய் ஊதியம்…! ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்…!

Sat Aug 27 , 2022
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் சென்னையில் உள்ள அலுவலகங்களில் Technician Apprentices பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு என மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் Diploma தேர்ச்சி […]
பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! கைநிறைய சம்பளம்..!

You May Like