fbpx

தீவிரமடையும் கொரோனா தொற்று..!! சென்னையில் ஒருவர் பலி..!! பொதுமக்கள் பீதி..!!

நாட்டில் ஜேஎன்.1 என்ற உருமாறிய கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. முதலில் கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலையில், தற்போது மற்ற மாநிலங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அதே நேரம் தற்போதைய சூழலில் புதிய கொரோனாவால் தமிழ்நாட்டிற்கு பெரிதாக எந்த பாதிப்பும் இல்லை என கூறப்பட்டு வருகிறது. பாதிக்கப்படும் நபர்கள் விரைவிலேயே குணமாகி விடுவதால், மக்கள் பதற்றமடைய தேவையில்லை எனவும் முதியவர்கள், குழந்தைகள், இணை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் பொது இடங்களில் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு சென்னையைச் சேர்ந்த ஒருவர் தற்போது பலியாகியுள்ளார். ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த 42 வயதான அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

Chella

Next Post

குட் நியூஸ்..!! ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு ரூ.6,000 நிவாரணத் தொகை..!! பணி தொடங்கியது..!!

Thu Jan 4 , 2024
மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணத்துக்கு விண்ணப்பித்த ரேஷன் கார்டு இல்லாதவர்களின் வீடுகளுக்குச் சென்று ஆய்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ரேஷன் கார்டு இல்லாத 5.5 லட்சம் பேர் ரூ.6,000 நிவாரணத்துக்கு விண்ணப்பித்திருந்தனர். அவ்வாறு விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்குச் சென்று ஆய்வு செய்து செயலியில் அவர்களின் விவரங்களை சரிபார்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விவரங்கள் சரிபார்ப்புக்கு பிறகு அவர்களுக்கு நிவாரணத்தொகை ரூ.6,000 வழங்கப்படும் […]

You May Like