fbpx

சர்வதேச யோகா தினம் 2023!… ஏன் கொண்டாடப்படுகிறது?… எங்கு, எப்போது தோன்றியது!… சிறப்புகள் இதோ!

யோகா என்பது உடலையும் மனதையும், எண்ணத்தாலும், செயலாலும் ஒருங்கிணைக்கும் கருவி. இத்தகைய பல்வேறு சிறப்புகள் கொண்ட யோகா தினம் பற்றிய சிறப்பு தொகுப்பை இதில் பார்க்கலாம்.

யோகா என்பது சமஸ்கிருதத்திலிருந்து உருவான வார்த்தையாகும். இதன் பொருள் சேருதல் அல்லது ஒன்றுபடுவதாகும். யோகா என்பது உடல் மற்றும் மனதின் ஒன்றிணைவு என்று அர்த்தம். ஆண்டு தோறும் ஜூன் மாதம் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. உடல் மற்றும் மனம் இரண்டுமே ஒருங்கிணைந்து, செயல்பட, உடல் ஆரோக்கியமாக இருக்க, நோய்களைத் தடுக்க, மூப்பைத் தடுக்க, என்று பல விதங்களில் யோகாசனம் மக்களுக்கு உதவுகிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மக்களின் வாழ்வில் ஒன்றிணைந்த யோகாவின் நன்மைகளும், யோகா பயிற்சிகள் செய்வதால் ஏற்படும் மாற்றங்களும் மக்களிடையே பரவத் தொடங்கியது. இந்தியாவின் பாரம்பரியமான யோகாசனம், வெளிநாட்டவர்களிடையே மிகவும் பிரபலமாகியது. மேற்கத்திய நாட்டைச் சேர்ந்தவர்களும் யோகாசனத்தை முறையாகக் கற்று தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றிக்கொண்டனர்.

ஐயாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா நாளாக ஆண்டின் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஐநா பொதுச்சபையில் 2014 செப்டம்பர் 27 அன்று வலியுறுத்தி உரையாற்றியிருந்தார். அதையொட்டி, 2014 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபையில் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

யோகா என்பது ஒன்றிணைத்தல் அல்லது ஒரு முகப்படுத்துதல் என்று கூறப்படுகிறது. யோகாசன பயிற்சிகள் எட்டு பாகங்களாக, அதாவது அங்கங்களாகப் பிரிக்கலாம். எனவே, யோகா என்பது ஆசனங்கள் மட்டும் அல்ல. அவசர கதியில் செல்லும் வாழ்க்கையில், உடல் நலமில்லாமல் போவது கூட தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை, மன அழுத்தம் மனச்சோர்வு (டிப்ரஷன்), படபடப்பு, போன்றவை மற்றும் இளம் வயதிலேயே உடல் பருமன், குறைபாடு ஆகியவை பரவலாகக் காணப்படுகிறது. வாழ்க்கை முறை நோய்களும் குறைபாடுகளும் அதிகரித்து வருகிறது.

முதல் சர்வதேச யோகா தினம்: முதல்முறையாக 2015, ஜுன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. யோகா தினம் அறிவிகப்பட்ட பொதுக் கூட்டத்தில், “யோகா என்பது உடலையும் மனதையும், எண்ணத்தாலும், செயலாலும் ஒருங்கிணைக்கும் கருவி. கட்டுப்படுத்திக் கண்டே மனதிருப்தி அடையவைக்கிறது; இயற்கையையும் மனிதனையும் இணைக்கும் பாலம்; உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றுக்கான ஹோலிஸ்டிக் முறை; யோகா பயிற்சி என்பது உடற்பயிற்சி கிடையாது, ஆனால் உங்களை நீங்களே கண்டுகொள்வதற்கும், உங்களுக்கும் இயற்கைக்கும் மற்றும் உலகத்துக்கும் உள்ள தொடர்பை அறிவதற்கும் உதவும் ஒரு அற்புதமான கருவி. கருத்தரிப்பதில் கோளாறு, தசை வீக்கம் அல்லது வலுவின்மை, ஹார்மோன் குறைபாடுகள், உடல் சூடு, தீவிரமான ஸ்ட்ரெஸ், எடை குறைப்பு, பாலியல் குறைபாடுகள் என்று எந்த விதமான பாதிப்புகள் என்றாலும், யோகா பயிற்சிகள் செய்யும் போது தீர்வாக அமையும். யோகாசனப் பயிற்சிகளை அன்றாட வாழ்வில் ஒருங்கிணைப்பதால் உடல் நலம் மட்டுமல்லாமல், மன ரீதியான பிரச்சனைகளும் இல்லாமல், நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ முடியும்.

Kokila

Next Post

அதிக ரன்கள் குவிப்பு!... ஸ்டம்பிங் முறையில் அவுட்!... சச்சின், கோலியை பின்னுக்கு தள்ளிய ஜோ ரூட்!... வித்தியாசமான சாதனை!

Wed Jun 21 , 2023
இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் முதல் முறையாக தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் ஸ்டம்பிங் முறையில் ஆட்டம் இழந்ததையடுத்து வித்தியாசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். நடந்து வரும் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட், இரண்டாவது இன்னிங்ஸில் 46 ரன்கள் எடுத்த நிலையில் முதன்முறையாக ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். நேதன் லியொன் பந்தில் ரூட், ஸ்டம்பிங் அவுட் ஆனார். […]

You May Like