fbpx

தூள்…! 1068 அரசு விரைவு பேருந்துகளில் யுபிஐ மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம்…!

அரசு விரைவு பேருந்துகளில் யுபிஐ பரிவர்த்தனை மூலம் டிக்கெட் பெறும் வசதியை 328 ஏசி பேருந்துகள் உட்பட 1068 பேருந்துகளிலும் அறிமுகப்படுத்தி உள்ளது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்.

சென்னை மாநகரப் பேருந்துகள் மற்றும் அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் இனி யுபிஐ, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் டிக்கெட்டுகளை எடுத்து கொள்ளலாம். கடந்த மார்ச் 1 நிலவரப்படி சென்னையில் 129 மாநகர பேருந்துகளில் மின்னணு டிக்கெட் இயந்திரங்கள் உள்ளன, இந்த நடைமுறை அனைத்து பேருந்துகளுக்கும் நடைமுறைப்படுத்த அரசியல் திட்டமிட்டுள்ளது. இதேபோல், கன்னியாகுமரி, ராமேஸ்வரம் மற்றும் கூடலூர் செல்லும் விரைவு பேருந்துகளில் சோதனை அடிப்படையில் யுபிஐ முறை கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில் அரசு விரைவு பேருந்துகளில் யுபிஐ பரிவர்த்தனை மூலம் டிக்கெட் பெறும் வசதியை 328 ஏசி பேருந்துகள் உட்பட 1068 பேருந்துகளிலும் அறிமுகப்படுத்தி உள்ளது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம். இதற்குமுன் சென்னை மாநகர பேருந்துகளில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது விரைவு பேருந்துகளிலும் ஜி பே, கிரெடிட கார்ட் மற்றும் டெபிட் கார்ட், ஃபோன் பே மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

அதிகரிக்கும் ஆன்லைன் பர்ச்சேஸ்கள்!… பேய் மால்களாக மாறும் இந்தியாவின் ஷாப்பிங் சென்டர்கள்!… அதிர்ச்சி!

Wed May 8 , 2024
Ghost Malls: நுகர்வோர்கள் ஆன்லைன் கொள்முதல் மற்றும் சிறந்த ஷாப்பிங் மையங்களை நோக்கிச் செல்வதால், இந்தியாவின் சிறிய மால்கள் பெருகிய முறையில் பேய் மால்களாக மாறி வருவதாக அறிக்கை ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது. 2023 ஆம் ஆண்டில் பிரைம் இந்திய சந்தைகளில் உள்ள அனைத்து ஷாப்பிங் சென்டர்களின் மொத்த குத்தகைப் பகுதி (ஜிஎல்ஏ) ஆண்டுக்கு ஆண்டு 238% அதிகரித்துள்ளது, 2022 இல் பேய் மால்களின் எண்ணிக்கை 57 இல் இருந்து […]

You May Like