fbpx

ஐபிஎல் 2023 பரிசுத் தொகை அறிவிப்பு!… எந்தெந்த அணிகளுக்கு எவ்வளவு தெரியுமா?

ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான பரிசுத் தொகை மும்பைக்கு ரூ.7 கோடி என்றும், லக்னோவிற்கு ரூ.6.5 கோடி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் முதலாக கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் தொடங்கப்பட்டது. அந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. முதல் 2 சீசன்களாக வெற்றி பெற்ற அணிக்கு ரூ. 4.8 கோடியும், 2ஆவது இடம் பிடித்த அணிக்கு ரூ.2.4 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.அதன் பிறகு, ஐபிஎல் கிரிக்கெட் மீதான எதிர்பார்ப்பு, ஸ்பான்ஸர்கள் காரணமாக பரிசுத் தொகையும் அதிகமாக வழங்கப்பட்டது. உலகளவில் முக்கியமான போட்டியாக கருதப்படும் ஐபிஎல் கிரிக்கெட்டிற்கு கடந்த 15 ஆண்டுகளாக இல்லாத வகையில் இந்த ஆண்டில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.20 கோடியும், 2ஆவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.13 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 3ஆவது இடம் பிடித்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரூ.7 கோடியும், 4ஆவது இடம் பிடித்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு ரூ.6.5 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது. இந்த சீசனுக்கு ரூ.46.50 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் ஸ்பான்ஸர்கள், ஐபிஎல் மீதான எதிர்பார்ப்பு காரணமாக கூடுதலாக வழங்கப்படும் என்று பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அதிக ரன்கள் எடுத்தவர்கள் (ஆரஞ்சு கேப்), அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களுக்கு (பர்பிள் கேப்) தலா ரூ.15 லட்சமும், வளர்ந்து வரும் வீரருக்கான விருதுக்கு ரூ.20 லட்சமும், மதிப்புமிக்க வீரருக்கான விருதுக்கு ரூ.12 லட்சமும், சூப்பர் ஸ்டிரைக்கர் விருதுக்கு ரூ.15 லட்சமும், கேம் சேஞ்சர் விருதுக்கு ரூ.12 லட்சமும் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரூ.20 கோடி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

கில் மாதிரி ஒரு பேட்ஸ் மேன் எங்கள் அணியிலும் இருந்திருந்தால்!... ரோஹித் ஷர்மா ஓபன் டாக்!

Sun May 28 , 2023
கில் மாதிரி ஒரு பேட்ஸ் மேன் எங்கள் அணியிலும் கடைசி வரை இருந்திருந்தால் இந்த ஆடுகளத்தில் இது எட்டக்கூடிய இலக்குதான் என்று மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார் ஐபிஎல் தொடரின் குவாலிபையர் 2வது தகுதிச்சுற்று போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது. முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 227 […]

You May Like