fbpx

IPL 2025 | குஜராத் டைட்டன்ஸ் அணியை வாங்கும் அதானி குழுமம்..!! மதிப்பு என்ன தெரியுமா?

ஐ.பி.எல் தொடரில் விளையாடும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் உரிமை மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து, இந்த அணியை தொழிலதிபர் கவுதம் அதானி வாங்க வாய்ப்பு உள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன.

ஐபிஎல் தொடரில் 2022ஆம் ஆண்டு 2 புதிய அணிகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதில் குஜராத் அணியை சிவிசி கேபிட்டல்ஸ் அணியும், லக்னோ அணியை ஆர்பிஎஸ்ஜி நிறுவன உரிமையாளர் சஞ்சீவ் கொயங்காவும் பெரும் தொகை கொடுத்து வாங்கினர். அதில் குஜராத் அணி ரூ.5,625 கோடிக்கு வாங்கப்பட்டது. புதிய அணிக்கான ஏலத்தின் போது இந்தியாவின் முக்கியமான தொழிலதிபர்களில் ஒருவரான கவுதம் அதானியும் பங்கேற்றிருந்தார்.

2021 ஆம் ஆண்டில், அதானி குழுமம் ₹5,100 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் உரிமையைப் பெற முயற்சித்தது, அதே சமயம் டோரண்ட் குழுமம் ₹4,653 கோடிக்கு ஏலம் எடுத்தது. இறுதியில், CVC கேபிடல்ஸின் இரேலியா ஸ்போர்ட்ஸ் இந்தியா அனைத்து போட்டியாளர்களையும் விஞ்சி அணியை கைப்பற்றியது.

ஐபிஎல் தொடரில் அணியை வாங்க முடியவில்லை என்றாலும், மகளிர் பிரிமியர் லீக் தொடரில் அகமதாபாத் அணியை ரூ.1,289 கோடிக்கு வாங்கினார். இந்த நிலையில் கவுதம் அதானி ஐபிஎல் அணியை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி குஜராத் அணியின் உரிமையை கொண்டுள்ள சிவிசி நிறுவனத்திடம் அந்த அணியின் அதிக பங்குகளை கொடுத்து வாங்க அதானி மற்றும் டோரண்ட் நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

தற்போது குஜராத் டைட்டன்ஸ் மதிப்பு விரைவாக உயர்ந்துள்ளது, தற்போது $1 பில்லியன் முதல் $1.5 பில்லியன் வரை மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) புதிய அணிகளுக்கான லாக்-இன் காலத்தை நீக்கி, பிப்ரவரி 2025 முதல் தங்கள் பங்குகளை விற்க அனுமதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒழுங்குமுறை மாற்றம் அதானி போன்ற முதலீட்டாளர்கள் தங்கள் தடத்தை நுழைய அல்லது விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது.

Read more ; Budget 2024 | அடம்பிடித்த நிதிஷ், நாயுடு..!! பட்ஜெட்டில் வாரி வழங்கிய மத்திய அரசு..!!

English Summary

IPL 2025: Adani & Torrent Group Eyeing Majority Stake In Gujarat Titans For ₹12,550 Crore, Claims Report

Next Post

பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில், டீ கப், தட்டு விலை கடுமையாக உயரும்..!! பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு..!!

Tue Jul 23 , 2024
Union Finance Minister Nirmala Sitharaman has announced that the customs duty on plastic products will be increased from 15% to 25%.

You May Like