fbpx

ஐபிஎல்!… பெங்களூரை வீழ்த்திய குஜராத்!… பிளே ஆஃப்க்குள் நுழைந்தது மும்பை இந்தியன்ஸ்!

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியை வீழ்த்தி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிபெற்றதையடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நான்காவது அணியாக நுழைந்துள்ளது.

ஐபிஎல் 2023 தொடரின் பரபரப்பான இறுதிக்கட்ட லீக் சுற்று போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன. அதன்படி, பிற்பகல் 7.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி 101* ரன்களும், டு பிளெசிஸ் 28 ரன்களும், மைக்கேல் பிரேஸ்வெல் 26 ரன்களும், அனுஜ் ராவத் 23* ரன்களும் குவித்தனர். குஜராத் அணியில் நூர் அகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து, 198 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் விருத்திமான் சாஹா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின், சுப்மன் கில் மற்றும் விஜய் சங்கர் ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஒருபுறம் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி அரைசதம் கடக்க, மறுபுறம் விஜய் சங்கர் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் தசுன் மற்றும் டேவிட் மில்லர்(6 ரன்கள்) அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றத்தை அளித்தனர். ஆனால், சுப்மன் கில் தனது அட்டகாசமான பேட்டிங்கால் சதமடித்து வெற்றி இலக்கை எட்டினார்.

முடிவில், குஜராத் அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக சுப்மன் கில் 104* ரன்களும், விஜய் சங்கர் 53 ரன்களும் குவித்தனர். பெங்களூரு அணியில் முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தது. இந்த தோல்வியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது. பெங்களூரு தோல்வி அடைந்த காரணத்தால் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்குள் நான்காவது அணியாக நுழைந்துள்ளது. சென்னை – சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு சீசனின் குவாலிபையர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் குஜராத் மற்றும் சென்னை அணிகள் குவாலிபையர் 1 போட்டியில் விளையாடுகின்றன. எலிமினேட்டர் போட்டியில் லக்னோ மற்றும் மும்பை அணிகள் விளையாடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

தல தோனிதான் தலைவன்!... பெருமிதமாக தமிழில் ட்வீட் செய்த ஹர்பஜன்!

Mon May 22 , 2023
பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள சென்னை அணியை பாராட்டி முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்துள்ளார் . ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி, தற்போது அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய தீவிரம் காட்டி வருகின்றன. ஏற்கெனவே குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் […]

You May Like