fbpx

“நிர்மலா சீதாராமனை பதவி விலகக் கோரிய வருவாய் துறை அதிகாரி சஸ்பெண்ட்..” ஓய்வு பெறுவதற்கு முன் பாய்ந்த நடவடிக்கை.!

சென்னையில் இந்திய வருவாய் சேவை துறையின் துணை ஆணையராக பணியாற்றிய பாலமுருகன் என்பவரை பணியிடை நீக்கம் செய்து இந்திய வருவாய்த்துறை உத்தரவிட்டிருக்கிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கூறி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி இருந்த நிலையில் இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக வருவாய் துறை தெரிவித்திருக்கிறது.

சென்னை இந்திய வருவாய் துறையில் ஜிஎஸ்டி பிரிவு துணை ஆணையராக பணியாற்றி வருபவர் பாலமுருகன். இவர் சேலம் அருகே தலித் சமூகத்தைச் சார்ந்த இரண்டு ஏழை விவசாயிகளுக்கு ஜாதி பெயர் குறிப்பிட்டு சம்மன் அனுப்பப்பட்டது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் நிர்மலா சீதாராமன் மத்திய அமைச்சராக பதவியேற்ற பிறகு இந்திய வருவாய் துறை பிஜேபியின் அடியாட்கள் போல செயல்படுவதாக குற்றம் சாட்டினார். மேலும் இதற்கு காரணமான மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை பதவி நீக்கம் செய்யும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் பாலமுருகன் ஓய்வு பெறுவதற்கு 2 நாட்களுக்கு முன்னதாக அவரை பணியிடை நீக்கம் செய்வதாக இந்திய வருவாய் துறை தெரிவித்திருக்கிறது. மேலும் ஒழுங்கு நடவடிக்கைகளின் அடிப்படையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. சேலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சார்பாக வருவாய் அதிகாரி பாலமுருகனின் மனைவி வாதாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

பரபரப்பு தீர்ப்பு: 'கியான்வாபி' மசூதியில் 'இந்துக்கள்' வழிபாடு நடத்த நீதிமன்றம் அனுமதி.!

Wed Jan 31 , 2024
உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள கியான்வாபி மசூதி, பண்டைய ஹிந்து கோவிலை இடித்து கட்டப்பட்டதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து மசூதி தொடர்பான வழக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் மசூதியை ஆராய்ந்து ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கும் படி இந்திய தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்திய தொல்லியல் துறையின் ஆய்வறிக்கையில் உடைந்த இந்து தெய்வங்களின் சிலை மற்றும் சிவலிங்கம் இருந்ததற்கான புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் மசூதியில் […]

You May Like