fbpx

படிக்க சொன்னது ஒரு குத்தமா?… வகுப்பறையில் புகுந்து ஆசிரியரை வெட்டிய மாணவர்கள்!

விருதுநகரில் 2 மாணவர்கள் வகுப்பறையில் புகுந்து ஆசிரியரை வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள திருத்தங்கலில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பொருளாதார ஆசிரியராக கடற்கரை ராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இதனிடையே, இவரது வகுப்பில் பயிலும் சில மாணவர்கள் சரியாக படிக்காமலும், வகுப்பறையில் சக மாணவர்களுடன் சேர்ந்து அடாவடித்தனத்தில் ஈடுபட்டும் வந்துள்ளனர். இந்நிலையில், அப்படி அராஜகம் செய்த இரண்டு மாணவர்களை ஆசிரியர் கடற்கரை ராஜ் அண்மையில் கூப்பிட்டு கண்டித்துள்ளார். அப்போது அரையாண்டு தேர்வு நெருங்கவுள்ளதால் ஒழுங்காக படிக்குமாறும் அறிவுரை வழங்கியுள்ளார்.

சக மாணவர்கள் மத்தியில் ஆசிரியர் தங்களுக்கு அறிவுரை கூறியதால் ஆத்திரமடைந்த மாணவர்கள், வகுப்பறையில் புகுந்து ஆசிரியரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ஆசிரியரின் தலையில் பலத்த வெட்டுக்காயம் விழுந்து அவர் கீழே விழுந்தார். இதையடுத்து, அந்த மாணவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பின்னர் மற்ற மாணவர்களும், ஆசிரியர்களும் சேர்ந்து அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதகுறித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்த போலீசார், தப்பியோடி இரண்டு மாணவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Kokila

Next Post

நாக தோஷம் வரமால் தடுக்க முடியுமா?… புராணங்கள் கூறுவது என்ன?

Wed Dec 6 , 2023
ஜாதகத்தில் சர்ப்பதோஷம் உள்ளவர்கள், முற்பிறவியில் அல்லது இந்த ஜென்மத்தில் பாம்புகளை கொன்றவர்கள், அல்லது பலவித மந்திர மருந்துகளால் பாம்புகளை கட்டியவர்கள். பிறந்த ஜாதகத்தில் ராகு மற்றும் கேது இடையே கிரகங்கள் உள்ளவர்கள், ராகு பஞ்சமத்தில் இருக்கிறார் என்றும் இது நாக தோஷம் என்றும் அழைக்கப்படுகிறது. “நாகதோஷம்” இருப்பதற்கான அறிகுறிகள். இந்த தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் தாமதமாகும். குழந்தை பாக்கியம் கிடைப்பதில் சிரமம், விடாமல் துரத்தும் குடும்பப் பிரச்சினை, வேலையில் தடை, […]

You May Like