நாள்தோறும் நாம் சமையலில் சேர்த்துக் கொள்ளும் பொருட்களில் மிகப்பெரிய மருத்துவ குணம் கொண்டது பெருஞ்சீரகம் என்று சொல்லப்படும் சோம்பு. அதன் எண்ணற்ற பயன்கள் தொடர்பாக தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
பெருஞ்சீரகத் தண்ணீரை குடித்து வருவதால் உடலில் ஹார்மோன் சமநிலை உண்டாகிறது. கோடை காலத்தில் உண்டாகும் செரிமான பிரச்சனை பெருஞ்சீரக தண்ணீரை குடித்தால் குணமாகும் என்றும் கூறப்படுகிறது.
பெருஞ்சீரகத்தை மென்று அதன் பிறகு தண்ணீர் குடித்தால் வாயு தொந்தரவு பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். பெருஞ்சீரகத்தில் இருக்கின்ற ஆன்ட்டிபிராஸ்மோட்டிக் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும்.
பெருஞ்சீரகத்தில் இருக்கின்ற விட்டமின் சி உடலில் இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க உதவி புரிகிறது. வாய் துர்நாற்றம் கொண்டவர்கள் இந்த பெருஞ்சீரகத்தை மென்று வாய் கொப்பளித்தால் துர்நாற்றம் அறவே நீங்கும் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் பெருஞ்சீரகத்தில் இருக்கின்ற அனெத்தோல் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை வெகுவாக தடுக்கிறது.