fbpx

அடுத்த போட்டியிலும் இவர் இல்லையா..? சுப்மன் கில்லை தனிமையில் விட்டுச் சென்ற இந்திய வீரர்கள்..!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்தியா, 200 ரன்களை துரத்தியபோது, முதல் 2 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் சிக்கியது. இந்நேரத்தில் விராட் கோலி உடன் இணைந்து 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததோடு, இறுதிவரை களத்தில் நின்று 115 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு வெற்றியையும் தேடி தந்து அசத்தினார் கே.எல்.ராகுல்.

விராட் கோலி – கே.எல்.ராகுலின் அபார ஆட்டத்தால் இந்தியா ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக போட்டியில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் காய்ச்சல் காரணமாக இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் விளையாடவில்லை. இந்நிலையில், இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் வரும் 11ஆம் தேதி மோதுகிறது.

டெல்லியில் நடைபெறும் இந்த போட்டிக்காக இந்திய அணியினர் இன்று சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றனர். இவர்களுடன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள சுப்மன் கில் புறப்பட்டு செல்லவில்லை. அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் சென்னையிலே உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அடுத்த போட்டியிலும் அவர் விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

’பிதாமகன் தயாரிப்பாளரை மோசமான நிலைக்கு தள்ளிய இயக்குனர் பாலா’..!! புட்டு வைத்த முக்கிய புள்ளி..!!

Mon Oct 9 , 2023
பிதாமகன் தயாரிப்பாளர் வி.ஏ.துரைக்கு இயக்குனர் பாலா செய்த துரோகம் குறித்து, பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேசி இருக்கிறார். இதுகுறித்து அவர் பேசுகையில், ”அந்த சமயத்தில், சின்ன சின்ன பட்ஜெட் திரைப்படங்களை வி.ஏ.துரை தயாரித்து வந்தார். இதற்கிடையேதான், அவர் இயக்குநர் பாலாவின் திரைப்படங்களை பார்க்கிறார். இந்த இயக்குநர் வித்தியாசமாக படம் எடுக்கிறாரே என்று அவரை அழைத்து, தனக்கு படம் ஒன்றை இயக்கி தருமாறு கமிட் செய்துள்ளார். அந்த திரைப்படம்தான் ‘பிதாமகன்’. […]

You May Like