fbpx

ரவீந்தர் இப்படிபட்டவரா..? இனியும் என்னால வாழ முடியாது..!! விவகாரத்துக்கு தயாராகும் மகாலட்சுமி..!!

திரைப்படத் தயாரிப்பாளராக அறிப்பட்டவர் தான் ரவீந்தர். இவர் நட்புன்னா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்துள்ளார். இவர் சீரியல் நடிகை மகாலட்சுமியை கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர், சந்தோஷமாக வாழ்க்கையை நடத்தி வந்த இவர்களது வாழ்வில் புயல் வீசியது போன்று ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

அதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு மோசடி வழக்கில் ரவீந்தரை போலீசார் கைது செய்தனர். திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் ஒரு ப்ராஜெக்ட்டில் முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக கூறி சுமார் ரூ.16 கோடி அளவுக்கு ஏமாற்றி இருப்பதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், போலி ஆவணங்களைக் காண்பித்து பணத்தைப் பெற்று மோசடி செய்தது அம்பலமானது. இதையடுத்து, ரவீந்தர் கைது செய்யப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, ரவீந்தர் இதுபோல் பல பிரபலங்களை ஏமாற்றி வந்துள்ளார். அதுமட்டுமல்லாது இது குறித்த சம்பவங்களை மறைத்து தான் மகாலட்சுமியை ரவீந்தர் திருமணம் செய்துகொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ஒவ்வொரு விஷயமாக வெளிவரவே, ரவீந்தர் மீது மகாலட்சுமி கடும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், விவகாரத்து செய்யும் முடிவு கூட எடுக்க வாய்ப்பு உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Chella

Next Post

வெள்ளிக் கோளில் அப்படி என்னதான் இருக்கு..? சுக்ரயான் திட்டம் தயார்..!! இஸ்ரோ தலைவர் அறிவிப்பு..!!

Thu Sep 28 , 2023
வெள்ளிக்கோளை ஆராய்வதற்கான சுக்ரயான் திட்டம் தயார் நிலையில் உள்ளதாக, இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அடுத்தடுத்து மேற்கொள்ளும் ஆராய்ச்சி பணிகள், சர்வதேச அளவில் நாட்டின் மதிப்பை உயர்த்தி வருகின்றன. திட்டமிட்டபடி, சந்திரயான் – 3 விண்கலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கப்பட்டு, சாதனை படைக்கப்பட்டது. தொடர்ந்து, ஆதித்யா எல்1 விண்கலமும் தனது பயணத்தை திட்டமிட்டபடி மேற்கொண்டுள்ளது. அடுத்தாண்டு இந்த விண்கலம் தனது ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் […]

You May Like