சிரியாவில் அமெரிக்கா MQ 9 ட்ரோன்கள் மூலமாக நடத்திய வான் தாக்குதலில் ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தின் முக்கியத் தலைவர் உஸ்மா அல் முஹாஜிர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கிழக்கு சிரியாவில் தங்கியிருந்த தீவிரவாத தலைவரை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த ட்ரோன்களை சில நாட்களுக்கு முன்பு ஈராக்-சிரியா எல்லைப் பகுதி அருகே ரஷ்ய போர் விமானங்கள் இடை மறித்து நேருக்கு நேர் மோத வந்ததாக கூறப்பட்டது.
இது தொடர்பான வீடியோ காட்சிகளையும் அமெரிக்க அரசு வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து சிரியாவில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது அமெரிக்கா வான் தாக்குதலை அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் தாக்குதல்கள் நடத்த சதித்திட்டம் தீட்டி வரும் தீவிரவாதத் தலைவர்களை குறிவைத்து அழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கியுள்ளது.