fbpx

இஸ்ரேல் – பாலஸ்தீன போர் எதிரொலி..!! தங்கம் விலையில் நிகழப்போகும் மாற்றம்..!! அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!

இஸ்ரேலில் திடீரென்று, அத்துமீறி ஹமாஸ் அமைப்பினர் கடந்த சனிக்கிழமை அன்று ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேல் ராணுவத்தினர் மட்டுமின்றி, பொதுமக்களும் பாதிப்புக்கு உள்ளாகினர். பல்வேறு தரப்பினரும் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் மீது திடீரென்று, ஹமாஸ் அமைப்பு நடத்திய இந்த கொடூர தாக்குதலுக்கு, பல்வேறு உலக நாடுகள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன.

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்தியதை அடுத்து மத்திய கிழக்கு நாடுகளிற்கிடையில் பெரும் போர் முறுகல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக காசா முனை, மேற்குகரை உள்ளிட்ட பகுதிகளில் போர் பதற்றம் நிலவுகிறது. இந்த போரின் பக்கவிளைவாக சர்வதேச சந்தையில் தங்கம், கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்துள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், கச்சா எண்ணெய் விலை 5% உயர்ந்துள்ளது. அதன்படி, சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 88 டொலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. அதேவேளை, தங்கத்தின் விலையிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளன.

Chella

Next Post

"உயிரிழந்த உடல்களின் அடியில் மறைந்து இருந்து அனைவரும் உயிர் தப்பினோம்" தப்பி பிழைத்த இளம் பெண் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!

Wed Oct 11 , 2023
இஸ்ரேல் நாட்டை அடுத்துள்ள காசா பகுதியை ஒட்டி இருக்கக்கூடிய ஒரு பகுதி அருகே கடந்த சனிக்கிழமை இரவு இசை திருவிழா நடந்தது. அங்கே நூற்றுக்கணக்கான மக்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்டாட்டத்துடன் இருந்தனர். ஆனால், திடீரென்று அவர்கள் மீது ஹமாஸ் அமைப்பினர் எதிர்பாராத விதமாக தாக்குதல் தொடுத்தனர். ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் நாட்டின் மீது ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் மூலமாக தாக்குதல் நடத்தியது. இதில் அந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில், சுமார் […]

You May Like