fbpx

கவனம்…! நாளை தான் கடைசி தேதி…! உடனே ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்…! இல்லை என்றால் சிக்கல்…!

வாக்காளர்‌ பட்டியலுடன்‌ ஆதார்‌ எண்ணை இணைக்கும்‌ பணியானது 8-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல்‌ ஆணையத்தின்‌ ஆணைப்‌ படி வாக்காளர்‌ பட்டியலுடன்‌ ஆதார்‌ எண்ணை இணைக்கும்‌ பணியானது கடந்த 01.08.2022 முதல்‌ தொடங்கி இன்று நடைபெற்று வருகிறது. 18 வயது நிறைவடைந்து இதுவரை வாக்காளர்‌ பட்டியலில்‌ பெயர்‌ சேர்க்காதவர்கள்‌, மற்றும்‌ 17 வயது பூர்த்தி அடைந்த இளம்‌ வாக்காளர்கள்‌ வாக்காளர்‌ பட்டியலில்‌ தங்கள்‌ பெயரை சேர்க்க நாளை மாலை வரை படிவங்களை பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட வாக்குச்‌ சாவடி மைய அலுவலர்களிடம்‌ ஒப்படைக்க வேண்டும்.

வாக்காளர்‌ பட்டியலில்‌ பெயர்‌ இடம்‌ பெற்று நாளது வரை ஆதார்‌ எண்ணை இணைக்காமல்‌ இருக்கும்‌ வாக்காளர்கள்‌ தாமாக முன்வந்து தங்களுடைய ஆதார்‌ விவரங்களை சம்மந்தப்பட்ட வாக்குச்‌ சாவடி நிலைய அலுவலர்களிடம்‌ ஒப்படைக்க வேண்டும். மேலும்‌, பொதுமக்கள்‌மேற்கண்ட வசதிகளை தங்கள்‌ வீடுகளிலிருந்தே பெற www.nvsp.in என்ற இணையதள முகவரியில்‌, Apply Online/ Correction Enquiries என்ற லிங்க்‌ மூலம்‌ விண்ணப்பிக்கலாம்‌.

மேலும்‌, செல்போனில்‌ Voters Help line App என்ற செயலியை பதிவிறக்கம்‌ செய்தும்‌விண்ணப்பிக்கலாம்‌. இது தொடர்பாக ஏதேனும்‌ சந்தேகங்கள்‌ இருப்பின்‌, 1950 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொண்டு, கூடுதல்‌ விவரங்கள்‌ பெறலாம்‌.

Vignesh

Next Post

நிம்மதி...! கருகலைப்பில் தாயின் முடிவே இறுதியானது...! அதிரடியான தீர்ப்பு வழங்கி நீதிமன்றம் உத்தரவு...!

Wed Dec 7 , 2022
கருக்கலைப்பு விஷயங்களில் ‘இறுதி முடிவு’ ஒரு பெண்ணின் பிரசவ விருப்பத்தையும், பிறக்காத குழந்தையின் கண்ணியமான வாழ்க்கைக்கான வாய்ப்பையும் அங்கீகரிக்க வேண்டும் என கூறி டெல்லி உயர் நீதிமன்றம் திருமணமான பெண்ணை கலைக்க அனுமதித்தது. நீதிபதி பிரதீபா எம். சிங், கரு பெருமூளைக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட பெண்ணை, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ வசதி அல்லது அவர் விருப்பப்பட்ட மருத்துவமனையில் உடனடியாக மருத்துவக் கர்ப்பத்தை கலைத்து கொள்ள அனுமதித்தார். டெல்லி உயர் நீதிமன்றத்தில் கருவில் […]

You May Like