ஒடிசா ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்களில் 793 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோரில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் ரயில் உட்பட அடுத்தடுத்து மூன்று ரயில்கள் விபத்துக்கு உள்ளானது, இந்த கோர விபத்தில் 280க்கும் மேற்பட்ட பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 1000-க்கும் மேற்பட்ட நபர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்பொழுது விபத்தில் காயம் அடைந்தவர்களில் 793 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 172 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.