fbpx

வரும் 11-ம் தேதி முதல் மாஸ்க், கிருமி நாசினி விற்பனை செய்ய இது கட்டாயம்… புதிய அறிவிப்பு…

மாஸ்க், கிருமி நாசினி உள்ளிட்ட பொருட்களை விற்க மருத்துவ உரிமம் பெற்றியிருப்பது கட்டாயம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது..

தமிழக அரசு இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மருத்துவ உபகரணங்களின் தயாரிப்பு இறக்குமதி மற்றும் விற்பனை ஆகியவற்றை கட்டுப்படுத்தவும், வரைமுறைப்படுத்தவும், ஆகஸ்ட் 11 முதல் மருத்துவ உபகரணங்களுக்கு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.. முகக்கவசம், தெர்மல் ஸ்கேனிங் கருவி, அறுவை சிகிச்சை கையுறைகள், மருத்துவமன படுக்கை, கவச உடைகள், கிருனி நாசினி, காண்டாக் டென்ஸ், அக்குபஞ்சர் கிட், குழந்தை படுக்கைக்கள் உள்ளிட்ட உபகரணங்கள் இந்த விதியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது..

மருத்துவ உபகரணங்களின் முழுமையான பட்டியல் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.. மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியத்தில் இணையதளத்தின் மூலம் உரிமத்தை பெற விண்ணப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது..

எனவே ஆகஸ்ட் 11-ம் தேதி முதல் உரிய உரிமம் இல்லாமல் முகக்கவசம், கிருமி நாசினி, கவச உடை, போன்ற மருத்துவ உபகரணங்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது…” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

100 ரூபாய் எடுக்க சென்ற கூலித்தொழிலாளி.. ஆனால் வங்கி கணக்கில் இருந்தது ரூ.2,700 கோடி!

Wed Aug 3 , 2022
உத்தரபிரதேசத்தின் கன்னோஜ் மாவட்டத்தில் 45 வயதான பிஹாரி லால் என்பவர் செங்கல் சூளையில் தினக்கூலியாக வேலை பார்த்து வருகிறார்.. அவர் தினமும் ரூ.600-800 சம்பாதித்து வருகிறார்.. இந்நிலையில் பிஹாரி லால், கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள இந்தியன் வங்கியில் உள்ள தனது ஜன்தன் கணக்கில் இருந்து ரூ.100 எடுக்கச் சென்றார், ஆனால் அவரின் வங்கிக்கணக்கில் ரூ.2,700 கோடி இருப்பதை கண்டுபிடித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.. இதையடுத்து […]

You May Like