fbpx

”இலவசம் தவறு என்று பிரதமர் கூறுவது அந்த கட்சியின் நிலைப்பாடு”..! எடப்பாடி பழனிசாமி

இலவசம் தவறு என்று பிரதமர் மோடி கூறுவது அந்த கட்சியின் நிலைப்பாடு என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “திமுக அரசின் புதுமைப்பெண் திட்டத்தை வரவேற்று இருப்பதன் மூலம் ரவீந்திரநாத் ஏற்கனவே திமுகவுடன் இருக்கும் நெருக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளார். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றம் சென்றிருக்கிறார். விசாரணைக்கு பின்னர் தெரியும். இப்போது அதுபற்றி கருத்து கூற முடியாது. இலவசங்கள் தொடர்பாக ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கிறது. இலவசம் தவறு என்று பிரதமர் மோடி கூறுவது அந்த கட்சியின் நிலைப்பாடு.

”இலவசம் தவறு என்று பிரதமர் கூறுவது அந்த கட்சியின் நிலைப்பாடு”..! எடப்பாடி பழனிசாமி

ஆனால் எம்ஜிஆர் ஆட்சியிலும், ஜெயலலிதா ஆட்சியிலும் எண்ணற்ற இலவச திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். எதிர்காலத்திலும் மக்களுக்கு என்ன தேவையோ அதை நாங்கள் செய்வோம். நான் ஆட்சியில் இருந்த போதும் போராடினேன். எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் போராடிக் கொண்டுதான் இருக்கிறேன். பொறுப்பேற்றதில் இருந்து தற்போது வரை போராடிக்கொண்டுதான் இருக்கிறேன். தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. மக்களுக்கு நன்மை கிடைக்கும் எந்த திட்டத்தையும் திமுக கொண்டுவரவில்லை. திமுக ஆட்சியில் சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணம் உயர்ந்துள்ளது. வாக்களித்த மக்களை அவர்கள் ஏமாற்றியுள்ளனர்.

”இலவசம் தவறு என்று பிரதமர் கூறுவது அந்த கட்சியின் நிலைப்பாடு”..! எடப்பாடி பழனிசாமி

இந்தியாவிலேயே அதிக தார்ச்சாலைகள் உள்ள மாநிலம் தமிழகம் என்பதை அதிமுக ஆட்சியில் தான் உருவாக்கினோம். மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1000, கல்விக்கடன் தள்ளுபடி, முதியோர் உதவித்தொகை, கியாஸ் மானியம், பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு என எதையும் திமுக அரசு செய்யவில்லை. ஆன்லைன் ரம்மி சூதாட்டம் தொடர்பாக நாங்கள் சட்டமே நிறைவேற்றினோம். ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் முதலமைச்சர் அதற்கு கருத்துக் கேட்பு கூட்டம் நடத்துகிறார். சூதாட்டத்துக்கு கருத்து கூட்டம் நடத்தும் ஒரே முதல்வர் ஸ்டாலின் மட்டும் தான்”. இவ்வாறு அவர் பேசினார்.

Chella

Next Post

”வாகன ஓட்டிகளே இந்த தவறை மட்டும் இனி செய்யாதீங்க”...! அபராதம் அதிரடி உயர்வு..!

Wed Sep 7 , 2022
ராங் ரூட்டில் வாகனங்கள் ஓட்டினால் விதிக்கப்படும் அபராத தொகையை உயர்த்தி, சென்னை போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்கும் வகையில், கடந்த 2011ஆம் ஆண்டு இ-சலான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து, கடந்த 2017ஆம் ஆண்டு பணமில்லா பரிவர்த்தனை மூலம் போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபடுவோரிடம் இருந்து அபராதம் வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அண்மையில், கியூஆர் கோடு முறையில் அபராதம் செலுத்தும் நடைமுறை கொண்டுவரப்பட்டது. […]
வாகன ஓட்டிகள் அபராதம் செலுத்தாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..? போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை..!!

You May Like