fbpx

’படிச்சு படிச்சு பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு’..! ’லீவு விடுங்க தெய்வமே’..! ஆட்சியரிடம் கெஞ்சிய மாணவர்கள்..!

கனமழை காரணமாக விடுமுறை அளிக்குமாறு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு மாணவர்கள் அனுப்பிய குறுஞ்செய்திகள் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழை காரணமாக பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களின் நலன்கருதி அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து வருகின்றனர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாணவர்கள் பலரும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று சரமாரியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களது கோரிக்கைகளை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள கவிதா ராமு, ஹாஹா இன்ஸ்டாவில் சில செய்தி கோரிக்கைகள் என்று பதிவிட்டுள்ளார்.

’படிச்சு படிச்சு பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு’..! ’லீவு விடுங்க தெய்வமே’..! ஆட்சியரிடம் கெஞ்சிய மாணவர்கள்..!
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்

அதில் ஒரு மாணவர் “ மேம், மார்க் வாங்கலனா எல்லாரும் கேப்பாங்க. உங்களையே நம்பி இருக்கேன். ஹெல்ப் மீ. எல்லாருக்கும் ஒருநாள் லீவு கொடுங்க. உங்களை மறக்கவே மாட்டேன். ஏஞ்சல்” என்று பதிவிட்டுள்ளார்.

இன்னொரு மாணவர், நாளைக்கு லீவு கொடுங்க கலெக்டர் அம்மா என்று பதிவிட்டு, கண்ணீருடன் கையெடுத்து கும்பிடும் செய்தியை அனுப்பியுள்ளார்.

’படிச்சு படிச்சு பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு’..! ’லீவு விடுங்க தெய்வமே’..! ஆட்சியரிடம் கெஞ்சிய மாணவர்கள்..!

மற்றொரு மாணவர் “ நாளைக்கு மட்டும் லீவு இல்லனா பைத்தியம் ஆயிடுவேன் போல. இங்க மழை பெய்யுது மேம். ப்ளீஸ்ஸ்ஸ்.. லீவ்வ்வ்.. லீவு மட்டும் விடுங்க மேம் உங்களுக்கு கோயில் கட்டுறேன் என் மனசுல.. படிச்சு, படிச்சு பைத்தியம் ஆயிரும்போல..” என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு மாணவர் “ நான் ஹாஸ்டல்ல தங்கி படிக்குறேன்.2 நாளா நேட்டிவ் ப்ளேஸ் போயிட்டேன். இப்போ ஹாஸ்டல் போக முடியல மேம். மழை மேடம் நாளைக்கு லீவு மேம் ப்ளீஸ்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த மாணவர்கள் அனுப்பிய செய்தி அனைத்தையும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பகிர்ந்துள்ளார். இந்த செய்தி இப்போது வைரலாகி வருகிறது.  

Chella

Next Post

’நரபலி கொடுக்கப்பட்ட பெண்களை பச்சையாக சாப்பிட்ட டாக்டர் குடும்பம்’..!! அதிரவைக்கும் வாக்குமூலம்..!!

Wed Oct 12 , 2022
கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கேரள மாநிலத்தில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த வழக்கில் பகவால் சிங் மற்றும் அவரது மனைவி லைலா மற்றும் அகமது முகமது ஷபி 3 பேர் […]
நரபலிக்கு முன்பே ஒரு கொலை..!! இறைச்சியை ரூ.20 லட்சத்திற்கு விற்றது அம்பலம்..!! திடுக்கிடும் வாக்குமூலம்..!!

You May Like