fbpx

திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!! சம்பள உயர்வு, இலவச வீட்டுமனை பட்டா..!! வெளியான அறிவிப்பு..!!

திருமலை திருப்பதி தேவஸ்தானம் தங்களது ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு மற்றும் இலவச வீட்டுமனை உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி செய்து வரும் நிலையில், இந்த மாத இறுதிக்குள் 5,000 ஊழியர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு மாதம் ரூ.10,000 ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. திடீரென சம்பள உயர்வு மற்றும் இலவச வீட்டு மனை அறிவிப்புகளை தேவஸ்தான வெளியிட்டுள்ளதால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி தேவஸ்தான ஊழியர்களுக்கு இன்னும் சில இன்ப அதிர்ச்சி தரும் அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Chella

Next Post

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்...!

Thu Dec 28 , 2023
தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி காலமானார். சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சில நேரங்களில் சுயமாக சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால் அந்த நேரங்களில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. நுரையீரல் நிபுணர்கள் அவரை கண்காணித்து சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் […]

You May Like