fbpx

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்..!! அகவிலைப்படி இம்முறை அதிரடியாக இருக்கும்..? எவ்வளவு தெரியுமா..?

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. தற்போது, மத்திய அரசின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் 42% அகவிலைப்படி உயர்வு மற்றும் அகவிலைப்படி நிவாரணத்தை பெற்று வருகின்றனர். நடப்பு ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான மாதங்களுக்கான அகவிலைப்படியானது இதுவரை அறிவிக்கப்படவில்லை.

ஆனால், ஏஐசிபிஐ தரவுகளின் படி, 3 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என்று கடந்த மாதம் அகில இந்திய ரயில்வே ஃபெடரேஷன் பொதுச்செயலாளர் சிவகோபால் மிஸ்ரா தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது ஜூன் மாதத்திற்கான புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அகவிலைப்படி 4 சதவீதங்கள் உயர்த்தப்பட்டு மொத்தம் 46% அகவிலைப்படி உயர்வு மற்றும் நிவாரணத்தை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பெறுவார்கள் என்று சில அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

மேலும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது ஜி-20 உச்சி மாநாட்டிற்கு பிறகான அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு வெளியிடப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Chella

Next Post

திடிரென்று இந்தியா திரும்பிய பும்ராவிற்கு மகிழ்ச்சியான செய்தி..!

Mon Sep 4 , 2023
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் சஞ்சனா கணேசன் தம்பதிக்கு இன்று காலை அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. கடந்த 2ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி […]

You May Like