செல்போன் கட்டணத்தை உயர்த்தி ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய கட்டண நடைமுறை வரும் ஜூலை மாதம் 3ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாள் ஒன்றுக்கு 1 GB Data வீதம் 28 நாட்களுக்கு வழங்கப்பட்டு வரும் பிளானின் புதிய கட்டணம் 249 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
கட்டண உயர்வுக்கு முன்பு இந்த பிளான் 209 ரூபாயாக இருந்தது. தற்போது, 30 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, நாளொன்றுக்கு 1.5 GB Data வீதம் 28 நாட்களுக்கு வழங்கப்பட்டு வரும் பிளானின் புதிய கட்டணம் 299 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 239 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், நாளொன்றுக்கு 2 GB Data வீதம் 28 நாட்களுக்கு வழங்கப்பட்டு வரும் பிளானின் கட்டணம் 299 ரூபாயில் இருந்து 349 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதே டேட்டா உடன் 56 நாட்களுக்கான கட்டணம் ரூ.533இல் இருந்து ரூ.629ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 84 நாட்களுக்கான கட்டணம் ரூ.719இல் இருந்து ரூ.859ஆகவும், 2.5 GB Data உடன் 365 நாட்களுக்கான கட்டணம் ரூ.2,999இல் இருந்து ரூ.600 உயர்ந்து ரூ.3,599ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வை அடுத்து ஜியோ வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.