fbpx

கோவை, மதுரையில் ஜியோவின் 5ஜி சேவை..!! வாடிக்கையாளர்கள் செம குஷி..!!

சென்னையைத் தொடர்ந்து கோவை மற்றும் மதுரையில் ஜியோவின் 5ஜி சேவையை அமைச்சர் மனோ தங்கராஜ் நாளை தொடங்கி வைக்கிறார்.

நாடு முழுவதும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 5ஜி இணையச் சேவையை விரிவுபடுத்தி வருகிறது. இந்தியாவில் அனைத்து மக்களுக்குக் கிடைக்கும் அதிவேக 5ஜி சேவை வழங்குவதையே இலக்காக வைத்து செயல்படுகிறோம் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்தியா முழுவதும் 2022 அக்டோபர் மாதம் 1ஆம் தேதி 5ஜி சேவையைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை, அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், டெல்லி, காந்திநகர், குருகிராம், ஹைதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே ஆகிய இடங்களில் 5ஜி சேவை செயல்பாட்டிற்கு வந்தது.

கோவை, மதுரையில் ஜியோவின் 5ஜி சேவை..!! வாடிக்கையாளர்கள் செம குஷி..!!

அதனைத் தொடர்ந்து ஜியோ நிறுவனம் சார்பில் டெல்லி, மும்பை, வாரணாசி, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத், சென்னை, புனே, குருகிராம், நொய்டா, காசியாபாத், பரிதாபாத் மற்றும் குஜராத் மாநிலம் ஆகிய பகுதிகளில் உள்ள 33 மாவட்டங்களில் 5ஜி சேவை வழங்கப்பட்டு வருகிறது. 2030 இறுதிக்குள் நாட்டின் அனைத்து கிராமங்களிலும் 5ஜி சேவையைக் கொண்டு சேர்க்கத் திட்டமிட்டுள்ளதாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்திருந்தார். அந்த நோக்கில் அடுத்தகட்டமாகத் தமிழகத்தில் கோவை மற்றும் மதுரை நகரங்களில் ஜியோவில் ட்ரூ 5ஜி சேவையை நாளை (ஜனவரி 10) தி.நகரில் உள்ள ஜிஆர்டி கன்வென்சன் மையத்தில் மாலை 5 மணிக்கு மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைக்கிறார்.

Chella

Next Post

9ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை.. வீடு திரும்பிய பெற்றோர்க்கு காத்திருந்த அதிர்ச்சி..!

Tue Jan 10 , 2023
புதுச்சேரி ஒன்றியம் முத்தியால்பேட்டை கணேஷ் நகர் 3வது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் தசரதன். கட்டிட தொழிலாளியான இவருக்கு இளவரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு சக்திமுருகன், பாலமுருகன் என இரு மகன்கள் உள்ளனர். சக்தி முருகன் காரைக்கால் நவோதயா பள்ளியிலும், இரண்டாவது மகன் பாலமுருகன் (14) தனியார் பள்ளியில் 9ம் வகுப்பும் படித்து வந்தனர். புதுவை வேல் சொக்கநாதன் திருமண மண்டபம் அருகே உள்ள டியூசன் சென்டரில் […]

You May Like