fbpx

தமிழ்நாட்டிலும் நுழைந்துவிட்டது JN.1 வகை கொரோனா..? 4 பேர் பாதிப்பு..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

தமிழ்நாட்டில் டிசம்பர் 24ஆம் தேதி வரை 4 பேருக்கு ஜே.என். 1 கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டிசம்பர் 24ஆம் தேதி வரை (நேற்று) நாடு முழுவதும் 63 பேருக்கு ஜே.என். 1 கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, கோவா மாநிலத்தில் 34, மகாராஷ்டிரா – 9, கர்நாடகா – 8, கேரளா – 6, தமிழ்நாடு – 4 தெலுங்கானா – 2 பேருக்கு ஜே.என் 1 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், தமிழ்நாட்டில் ஜே.என் 1 வகை பாதிப்பு குறித்து அதிகாரப்பூர்வ முடிவு கிடைக்கவில்லை என சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். அதிகாரப்பூர்வ முடிவு கிடைக்க சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் தற்போது 100 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். யாருக்கும் தீவிர பாதிப்பு இல்லை, லேசான அறிகுறிகளே உள்ளதால் பதற்றம் அடைய வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

சுரங்க குழிக்குள் பிணைக் கைதிகளின் சடலம்..!! கதிகலங்கும் வீடியோவை வெளியிட்ட இஸ்ரேல்..!!

Mon Dec 25 , 2023
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி பாலஸ்தீனத்தின் காஸாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் மீது திடீர் போர் தாக்குதல் தொடுத்தது. தொடர்ந்து இஸ்ரேல் – ஹமாஸ் இடையே இரண்டு மாதங்களுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,140 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அக்.7ஆம் தேதி நடைபெற்ற தாக்குதலின்போது, இஸ்ரேலில் இருந்து 250-க்கும் மேற்பட்டவர்களை ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன ராணுவத்தினர் பிணைக்கைதிகளாக […]

You May Like