fbpx

ஜான்சன் பேபி பவுடர் தடை செய்யப்பட்ட விவகாரம்… பவுடரை தயாரிக்க மட்டும் கோர்ட் அனுமதி…!!

ஜான்சன் பேபி பவுடரை மும்மையில் உள்ள தயாரிப்பு நிறுவனத்தில் உற்பத்திக்கு மட்டும் மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஜான்சன் அன்ட் ஜான்சன் பேபி பவுடர் தடை செய்யப்பட்ட விவகாரத்தில்  உற்பத்திக்கு அனுமதி வழங்கியுள்ள மும்பை உயர்நீதிமன்றம். விநியோகத்திற்கும், விற்பனைக்கும் தடையை நீட்டித்துள்ளது. இது குறித்து நீதிமன்றம் தெரிவிக்கையில், ’’மூலுண்ட் ஆலையில் நிறுவனம் தனது சொந்த ரிஸ்க்கில் தயாரித்துக் கொள்ளலாம். விநியோகமோ, விற்பனைக்கோ அனுமதியில்லை. ஏற்கனவே விதிக்கப்ட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.’’ என கூறியுள்ளது.

பேபி பவுடர் உற்பத்திக்கு பின்னர் மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் இரண்டு வாரங்களுக்கு இது குறித்து பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் உயர்மட்ட மருந்து ஒழுங்கு முறை அமைப்பான எஃப்டி தயாரிப்பின் மாதிரிகளை சேகரித்து  FDA மாதிரிகளை சேகரித்து சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. மறு பரிசோதனைக்காக அரசு ஆய்வகங்கள் மற்றும் ஒரு தனியார் ஆய்வகத்தின் முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

பேபி பவுடர் உற்பத்தி உரிமத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரத்த செய்தது. இதை எதிர்த்து அந்நிறுவனம் மேல்முறையீடு செய்தது. மனுவை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா. எஸ்.ஜி.டிகே. அமர்வு விசாரித்தது. பின்னர் பேபி பவுடரின் மாதிரிகள் ஆய்வு செய்து FDA அறிக்கை வழங்கியுள்ளது. தரமானதாக இல்லை என முடிவு வெளிவந்துள்ளது. எனவே பொதுநலன் கருதி கடந்த செப்டம்பர் 15ம்நாள் உற்பத்தி உரிமத்தை ரத்து செய்தது.

மேலும் இந்த பவுடரில் புற்றுநோயை வரவைக்கும் தன்மைகள் இருப்பதாக முதற்கட்ட முடிவுகளில் தெளிவானதை அடுத்து அடுத்தக்கட்டமாக சோதனைக்குட்படுத்தி உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் கொல்கத்தாவில் உள்ள மத்திய மருந்துசோதனை ஆய்வுக்கும் அனுப்பப்பட்டது. நுகர்வோர் ஆரோக்கியம் கருதி உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

Next Post

’’இறந்துகிடந்த ஷ்ரத்தா என்னை பார்த்து சிரித்தாள்’’-அலறவிட்ட அஃப்தாப்!!

Wed Nov 16 , 2022
டெல்லியில் கொலை செய்துவிட்டு காதலியின் உடலை 35 பாகங்களாக கூறுபோட்ட காதலனிடம் நடத்திய விசாரணையில் ’’இறந்துகிடந்த ஷ்ரத்தா என்னை பார்த்து சிரித்தாள்’’ என தெரிவித்ததால் போலீசே அலறிவிட்டனர். இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடந்த பல ஆண்டுகளாகவே பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மும்பையில் வசித்த ஷ்ரத்தா ஃபேஸ்புக்கில் காதலை பரிமாறி காதலனுக்காக வீட்டை விட்டு டெல்லிக்கு வந்தார். ஆனால் டெல்லியில் காதலன் அஃதாப்பிடம் திருமணம் பற்றி பேசியபோதுதான் […]
35 துண்டுகளான காதலியின் உடல்..!! 18 நாட்கள் பிரிட்ஜில் வைத்து மாநிலம் முழுவதும் வீசிய காதலன்..!! திகில் சம்பவம்..!!

You May Like