fbpx

‘நீதிபதி முன்பு சம்மதம் தெரிவித்துவிட்டு இப்போ வந்து இப்படி சொல்றீங்க’..!! மன்சூர் அலிகானை வெச்சி செய்த நீதிபதிகள்..!!

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சையான கருத்து ஒன்றை மன்சூர் அலிகான் பேசி இருந்தார். இந்த விவகாரத்தில், தான் பேசிய முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக அவர் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த நடிகைகள் த்ரிஷா, குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழக்கு தொடர அனுமதி கேட்டு மன்சூர் அலிகான் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, “நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது” என தெரிவித்தார். இதையடுத்து, மன்சூர் அலிகானின் மனுவை தள்ளுபடி செய்ததுடன் அவருக்கு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். தனக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை மன்சூர் அலிகான் 2 வாரங்களுக்குள் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்தி, அதுகுறித்து தெரிவிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மன்சூர் அலிகான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “அபராத தொகையை செலுத்துவதாக தனி நீதிபதி முன்பு ஒப்புக்கொண்டு, கால அவகாசமும் பெற்றுவிட்டு, தற்போது அதனை எதிர்த்து எப்படி மேல்முறையீடு வழக்கு தொடர முடியும்?” என கேள்வி எழுப்பியதுடன் ஏற்கனவே தனி நீதிபதி பிறப்பித்திருந்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர்.

“தனக்கு விதிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெறக்கோரி தனி நீதிபதி முன்பாக மன்சூர் அலிகான் வலியுறுத்தலாம். அல்லது அபராதத்தைக் கட்ட முடியுமா? முடியாதா? என்று தெரிவிக்கலாம்” என்று மன்சூர் அலிகான் தரப்புக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கு விசாரணையை பிப்ரவரி 7ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Chella

Next Post

விராட் கோலியின் தாய் கவலைக்கிடமா..? சகோதரர் வெளியிட்ட பதிவு..!!

Wed Jan 31 , 2024
இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்து அணி இந்தியா வந்திருக்கிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தத் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி பிப்.2ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலி முதல் இரண்டு போட்டிகளில் கலந்துகொள்ளவில்லை. கோலி தனிப்பட்ட காரணங்களினால் விலகியிருப்பதாக பிசிசிஐ அறிவித்திருந்தது. […]

You May Like