fbpx

ஜூலை 31ஆம் தேதியே கடைசி நாள்..! தவறினால் ரூ.5,000 அபராதம் விதிப்பு..!

ஜூலை 31ஆம் தேதிக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லையென்றால், ரூ.5,000 அபராதம் செலுத்த நேரிடும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

வங்கிக் கணக்கு வழியாக மாத ஊதியம் பெறுவோரும், தொழில் முனைவோரும், வருவாய் ஈட்டுவோரும் ஆண்டுக்கு ஒருமுறை வருமான வரி விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். மார்ச் மாதத்துடன் நிறைவடையும் நிதி ஆண்டுக்கான விவரங்களை அதே ஆண்டு ஜூலை 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். இது வருமான வரித்துறையால் வழக்கமாக பின்பற்றப்படும் நடைமுறையாகும். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக வருமான வரித்தாக்கல் செய்ய டிசம்பர் மாதம் வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

ஜூலை 31ஆம் தேதியே கடைசி நாள்..! தவறினால் ரூ.5,000 அபராதம் விதிப்பு..!

ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கும் மேல் பெறும் ஒவ்வொருவரும் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதிமுறையாகும். அதிலும், ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரையிலான வருமான வரிக் கணக்கிற்கு, கூடுதல் வரி எதுவும் இல்லை. ஆனால், அதே ரூ.5 லட்சத்துக்கு மேல் அதிகமான வருமானம் இருந்தால் வரி விதிக்கப்பட்டு வருகிறது. முன்கூட்டியே வருமான வரி தாக்கல் செய்துவிட்டால், அவருக்கு அரசு சலுகைகளையும் வழங்கி வருகிறது. இந்த நிலையில் 2021 – 2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் ஜூலை 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மேலும், கடந்த 2 ஆண்டுகளைப் போல இந்த ஆண்டு கூடுதல் கால அவகாசம் எதுவும் வழங்கப்படாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஜூலை 31ஆம் தேதியே கடைசி நாள்..! தவறினால் ரூ.5,000 அபராதம் விதிப்பு..!

ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு பிறகு சமர்ப்பிக்கப்படும் வருமான வரிக்கணக்குகளுக்கு தாமத கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். ஆகையால், இதனை தவிர்க்க வரிச் செலுத்துவோருக்கு செல்போன் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சலை வருமான வரித்துறை அனுப்பி வருகிறது. அத்துடன் தாமதமாக தாக்கல் செய்தால் ரூ.5 லட்சத்திற்கும் குறைவான வருமான வரிக்கணக்கிற்கு 1,000 ரூபாயும், ரூ.5 லட்சத்திற்கும் அதிகமான வருமான வரிக்கணக்கிற்கு 5,000 ரூபாயும் அபராதமாக வசூலிப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி..! முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா..!

Fri Jul 29 , 2022
மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதல் வெற்றியை இந்தியா பதிவு செய்துள்ளது. இந்திய வீரர் ரோனக் சத்வானி, ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த சேர்ந்த அப்துல் ரகுமானை முதல் சுற்று ஆட்டத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன்மூலம், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதல் வெற்றியை இந்தியா பதிவு செய்துள்ளது. ஓபன் பிரிவில் வெள்ளை நிறக் காய்களுடன் இந்திய வீரர் சத்வானி விளையாடினார். இவர் இந்திய […]
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி..! முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா..!

You May Like