நாளையுடன் ஜூன் மாதம் முடிவடைந்து நாளை மறுநாள் ஜூலை மாதம் தொடங்க இருக்கின்ற சூழ்நிலையில், மக்களுடன் தொடர்புள்ள நேரடி விவகாரங்களில் சில மாற்றங்கள் ஏற்பட இருக்கிறது. அதாவது, ஜூலை மாதம் சில முக்கிய நிதி விவகாரங்களில் பெரிய மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.
வருமான வரி ரிட்டன் கிரெடிட் கார்டு மற்றும் சமையல் எரிவாயு குறித்த பல விதிகள் ஜூலை மாதம் 1ம் தேதி முதல் வார இருக்கிறது இந்த மாற்றங்கள் சாமானிய மக்களின் வாழ்க்கையில் நேரடியாக தாக்கத்தை உண்டாக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் சில வங்கிகள் தொடர்ந்து 15 நாட்கள் இயங்காது என்றும் கூறப்படுகிறது.
தரம் இல்லாத செருப்பு மற்றும் காலனி உற்பத்தியில் கட்டுப்பாடு, வருமான வரி தாக்கல், புதிய கிரெடிட் கார்டு விதிமுறைகளில் மாற்றம், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றம் என்று அதிரடி மாற்றங்கள் நிகழலாம் என தகவல்கள் கிடைத்திருக்கிறது.
வெளிநாடுகளில் கிரெடிட் கார்டு மூலமாக 7 லட்சத்திற்கு மேல் செலவு செய்தால் 20 சதவீதம் டிசிஎஸ் கட்டணம் செலுத்த வேண்டும். அதேபோல சி என் ஜி விலையில் மாற்றம் உண்டாகலாம் என்று கூறப்படுகிறது. வரி செலுத்துபவர்கள் தங்களுடைய வருமான வரி கணக்கை ஜூலை மாதம் 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.