fbpx

ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..!! பணம் திருடு போகும் அபாயம்..!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் வங்கிக் கணக்கு மற்றும் டெபிட் கார்டுகளை வைத்துள்ளனர். இதன் மூலம் எப்போது வேண்டுமானாலும் ஏடிஎம் மூலம் பணம் எடுத்துக் கொள்ளலாம். இதற்காக வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனால், ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் போது முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அது உங்களுக்கு ஆபத்தில் தான் முடியும். அதாவது ஏடிஎம்மில் டெபிட் கார்டு பயன்படுத்தி பணம் எடுக்கும் போது பரிவர்த்தனை முடிவடைந்த உடன் கேன்சல் பட்டனை அழுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் வேறு யாரும் மோசடி செய்து உங்களின் பணத்தை எடுக்க முடியாது. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு முறையும் ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்த பிறகு கேன்சல் பட்டனை அழுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் உங்கள் டெபிட் கார்டின் பின் நம்பரை கார்டில் எழுதக்கூடாது எனவும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் எடுக்கும் போதெல்லாம் உங்கள் பின் நம்பரை யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அது மட்டுமல்லாமல் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் எடுக்கும் செயல்முறை முடிந்ததும் ஏடிஎம் இயந்திரம் மூலம் தகவல் நீக்கப்படும். அப்போது பரிவர்த்தனை முடிந்ததும் முகப்பு திரை தெரியும் என்றால் நீங்கள் ரத்து செய்யும் பட்டனை அழுத்த வேண்டாம். இருந்தாலும் ஏடிஎம் இயந்திரம் மூலம் பணம் எடுத்த பிறகு பரிவர்த்தனையை தொடர சொன்னால் கண்டிப்பாக அதனை ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் உங்கள் பணம் திருடப்பட்டு விடும்.

Chella

Next Post

பெற்றோரை பிரிந்து தனியாக வாழ நிர்பந்தமா..? இனி கணவர்களும் விவகாரத்து கோரலாம்..!! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

Tue Apr 11 , 2023
உலகின் பல்வேறு நாடுகளை ஒப்பிட்டு பார்க்கையில், இந்தியாவில் விவாகரத்து நடப்பது மிகக் குறைவு என்கிறது சர்வதேச அறிக்கை. அதாவது, இந்தியத் திருமணங்களில் நூற்றுக்கு ஒன்று மட்டுமே தோல்வியடைவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இதற்குக் காரணம், இந்தியர்கள் திருமணத்தை மதத்தோடும் கலாசாரத்தோடும் தொடர்புபடுத்திப் போற்றுவதுதான். ஆண்களோ, பெண்களோ, அவர்கள் திருமண வாழ்வு கசக்கும்போது, அதிலிருந்து விடுபட்டு வெளிவர நினைப்பது தவறானதல்ல. ஆனால், எந்தெந்தக் காரணத்துக்காக விவாகரத்துப் பெறுவது சட்டப்படி அங்கீகரிக்கப்படுகிறது என்பது குறித்த […]

You May Like