fbpx

வெறும் ரூ.20 செலுத்தினால் ரூ.2 லட்சம் வரை கிடைக்கும்..!! மத்திய அரசின் சூப்பர் திட்டம்..!! கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

நாட்டு மக்களுக்காக மத்திய அரசு பல்வேறு உதவித் தொகை திட்டங்களை வழங்கி வருகிறது. சாதாரண மக்கள் தங்களுடைய அவசர காலங்களில் மற்றும் வயதான காலங்களில் ஏற்படும் சிரமங்களை சமாளிக்கும் வகையில், பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் 18 முதல் 70 வயது வரை உள்ள மக்கள் பயன்பெறலாம். இதில் பொதுத்துறை வங்கி நிறுவனங்களில் உள்ள சேமிப்பு கணக்கு, போஸ்ட் ஆபீஸ் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். இத்திட்டத்தின் ஆரம்பத்தில் ஒருமுறை மட்டும் ரூ. 20 ரூபாய் செலுத்த வேண்டும். அதன் பிறகு வருடத்திற்கு ஒருமுறை கட்டணம் நேரடியாக வங்கிக் கணக்கிலிருந்து எடுத்துக்கொள்ளப்படும்.

இந்த திட்டத்தின் மூலம் மரணத்திற்கு பிறகு ரூபாய் 2 லட்சம் தொகை அல்லது விபத்துகளினால் 50 சதவீதத்திற்கும் மேல் உடல் ஊனமுற்றால் அவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்கப்படும். விபத்து நடந்த வருடத்திற்கான கட்டணம் செலுத்தி இருக்கும் பட்சத்தில் மட்டுமே இந்த தொகை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

பொம்பள பிள்ளைகளை பெத்தவங்க எல்லாம் கொஞ்சம் உஷாரா இருங்கப்பா….! நைசாக பேசி இருட்டறைக்கு அழைத்துச் சென்ற இளைஞர் செய்த சேட்டையால் பதறி கூச்சலிட்ட சிறுமி…!

Thu Aug 31 , 2023
கன்னியாகுமரி அருகே 14 வயது சிறுமி ஒருவரை, பேய் படம் காட்டுவதாக, இருட்டு அறைக்கு அழைத்துச் சென்று, அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர் செய்த செயலால், பதறி கூச்சலிட்ட சிறுமி. கன்னியாகுமரி மாவட்டம், திங்கள் நகர், வெட்டுக்காட்டுவிளை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின், 14 வயதான மகள் கடந்த சனிக்கிழமை இரவு தன்னுடைய வீட்டிற்கு அருகே, இருந்த புதிய வீட்டின் புதுமனை புகுவிழாவில் பங்கேற்றுக் கொள்வதற்காக, தன்னுடைய […]

You May Like