fbpx

தினமும் ரூ.29 சேமித்தால் போதும்.. லட்சக்கணக்கில் திரும்ப பெறலாம்.. பெண்களுக்கான அசத்தல் திட்டம்..

இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (LIC) தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறந்த திட்டங்களை வழங்கி வருகிறது. இப்போது எல்ஐசி குறிப்பாக பெண்களுக்கு ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டம் எல்ஐசி ஆதார் ஷீலா திட்டம் என்று அழைக்கப்படுகிறது. 8 முதல் 55 வயதுக்குட்பட்ட பெண்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

இந்த திட்டம் அதன் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் சேமிப்பு இரண்டையும் வழங்குகிறது. ஆனால் செல்லுபடியாகும் ஆதார் அட்டை வைத்திருக்கும் பெண்கள் மட்டுமே இதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். பாலிசிதாரர் முதிர்ச்சியடைந்தவுடன் பணத்தை பெறுவார்.. மேலும் இந்த திட்டம், பாலிசிதாரர் இறந்த பிறகு அவரது குடும்பத்திற்கும் நிதி உதவி வழங்குகிறது.

எல்ஐசி ஆதார் ஷிலா திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூ.75,000, அதிகபட்சம் ரூ.3 லட்சம் முதலீடு செய்யலாம். இந்த பாலிசியின் முதிர்வு காலம் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 20 ஆண்டுகள் ஆகும். அதே நேரத்தில், இந்தத் திட்டத்தின் பிரீமியம் பணம் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர அடிப்படையில் செய்யப்படுகிறது.

ஒரு உதாரணத்துடன் இந்த திட்டத்தை நீங்கள் புரிந்து கொள்ளலாம். நீங்கள் 30 வயது முதல், 20 வருடங்களுக்கு தினமும் ரூ.29 டெபாசிட் செய்தால், முதல் ஆண்டில், நீங்கள் மொத்தம் ரூ.10,959 வைப்பு வைத்திருப்பீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்போது அதற்கு 4.5 சதவீத வரியும் இருக்கும். அடுத்த ஆண்டு நீங்கள் ரூ .10,723 செலுத்த வேண்டும். நீங்கள் ஒவ்வொரு மாதமும், காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர அடிப்படையில் இந்த பிரீமியங்களை டெபாசிட் செய்யலாம். நீங்கள் 20 ஆண்டுகளில் ரூ .2,14,696 டெபாசிட் செய்ய வேண்டும் மற்றும் முதிர்வு நேரத்தில் நீங்கள் மொத்தம் ரூ .3,97,000 பெறுவீர்கள்.

Maha

Next Post

’கைலாசா’ நித்தியின் புது உருட்டு..!! ஐ.நா.வுக்கான தூதர் நியமனம்..!!

Tue Sep 27 , 2022
நித்தியானந்தா ’கைலாசா’ என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளதாக கூறிவரும் நிலையில், அந்நாட்டிற்கான ஐ.நா. தூதராக விஜயபிரியா நித்தியானந்தா என்பவரையும் நியமித்துள்ளார். பாலியல் வன்கொடுமை, ஆட்கடத்தல், மோசடி என்று பல வழக்குகளில் சிக்கி கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க தனது சில சீடர்களுடன் தலைமறைவானவர் நித்தியானந்தா. தொடர்ந்து, தனித் தீவு ஒன்றை குத்தகைக்கு எடுத்து, அதனை கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி இருப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். கைலாசா என்ற […]
இயக்குனர் செல்வராகவனை திடீரென சந்தித்த முதல்வர் முக.ஸ்டாலின்..!! எதற்காக தெரியுமா?

You May Like