fbpx

#JustIn : வசமாக சிக்கிய முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, விஜயபாஸ்கர்… மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, விஜயபாஸ்கர் வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்..

கோவை சுகுணாபுரத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் 3 வது முறையாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.. தொண்டாமுத்தூர், வடவள்ளி உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கோவை, சென்னை, திருச்சி என 26 இடங்களில் சோதனை நடைபெற்று வருகின்றது

இதே போல் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது.. சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் 13 இடங்களில் சோதனை நடைபெற்று வருகின்றது. தேசிய மருத்துவ குழும விதிக்கு முரணாக, திருவள்ளூரில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனைக்கு விஜயபாஸ்கர் சான்று வழங்கியதாக எழுந்த புகாரில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.. இந்த புகாரில் ஆவணங்களை கைப்பற்ற சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது..

Maha

Next Post

தேசிய உலோகவியலாளர் விருதுக்கு அடுத்த மாதம் 11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்....!

Tue Sep 13 , 2022
தேசிய உலோகவியலாளர் விருது திட்டம்: விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது, தேசிய உலோகவியலாளர் விருது 2022–ஐ வழங்க எஃகு துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 11.10.2022. விண்ணப்பங்களை https://awards.steel.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் . இரும்பு மற்றும் எஃகு துறையில் உற்பத்தி, ஆராய்ச்சி, வடிவமைப்பு, கல்வி, கழிவு மேலாண்மை, எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றில் சிறப்பான பங்களிப்பு செய்த உலோகவியலாளர்களை […]

You May Like