fbpx

#Just Now | கிண்டி ரயில் நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்..!! மனைவியை கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற கணவன்..!!

சென்னை பாரிமுனை பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன். கூலி வேலை செய்து வரும் இருவருக்கு வான்மதி என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், மது போதைக்கு அடிமையான வெங்கடேசன் தினமும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், மனைவி வான்மதியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து தினமும் அவரை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று மதியம் வான்மதி கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள நண்பரை பார்த்துவிட்டு வருவதாக தனது கணவரிடம் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேசன்,” அங்கு யாரை பார்க்க போகிறாய்” என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இருப்பினும் வான்மதி ரயிலேறி கிண்டி சென்றிருக்கிறார். கணவர் வெங்கடேசனும் அவரைப் பின் தொடர்ந்து சென்றுள்ளார். கிண்டி ரயில் நிலையத்தில் ரயிலை விட்டு வான்மதி இறங்கிய போது அவரை பின்தொடர்ந்து சென்ற வெங்கடேசன், அவரை தடுத்து நிறுத்தி சண்டையிட்டுள்ளார்.

சண்டை முற்றவே ஆத்திரமடைந்த வெங்கடேசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வான்மதியை கை, கால், முதுகு பகுதியில் சரமாரி குத்தியும் கத்தியால் கழுத்தை அறுத்தும் கொலை செய்ய முயன்றுள்ளார். இதனால் ரயில் நிலைய பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைப் பார்த்து அங்கிருந்தவர்கள் கூச்சலிடவே, அங்கு வந்த ரயில்வே போலீசார், வான்மதியை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர். பட்டப்பகலில் ரயில் நிலையத்தில் கணவனே மனைவியை ஓட ஓட கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Read More : ”இந்த வழக்குகளை விசாரிக்கவே கூடாது”..!! ஷாக் கொடுத்த மத்திய அரசு..!! அதிரடி உத்தரவு போட்ட சுப்ரீம் கோர்ட்..!!

Chella

Next Post

PM MODI: தேர்தல் விதிமுறைகளை மீறிய பிரதமர் மோடி.? தேர்தல் ஆணையத்திடம் புகாரளித்த இந்திய கம்யூனிஸ்ட் .!

Tue Mar 19 , 2024
2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தமிழக முற்படை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி வட மாநிலங்களில் வலுவானதாக இருந்தாலும் தமிழ்நாட்டில் மூன்றாவது அணியாக கூட பார்க்கப்படுவதில்லை. இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் சூழலில் தமிழக பாஜகவை வலுப்படுத்துவதற்காக பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் […]

You May Like