fbpx

கள்ளக்குறிச்சி அருகே நில தகராறு…..! 4 பேருக்கு அரிவாள் போட்டி காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை…….!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வெள்ளிமலை அருகே உள்ள எழுத்தூர் கிராமத்தில் வசிக்கும் கோவிந்தன் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவருக்கும் இடையே நில தகராறு இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இத்தகைய நிலையில் ராஜசேகரின் நிலத்திற்கு கோவிந்தன் குடும்பத்தினர் சென்றுள்ளனர். அப்போது ராஜசேகர் மற்றும் அவருடைய மகன்களான பாலகிருஷ்ணா, பாபு உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் இருதரப்பு நடக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் 2 குழுவினரும் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.

அப்போது ராஜசேகர் மற்றும் அவருடைய மகன்கள் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கோவிந்தனின் குடும்பத்தினர் ஆன ஷங்கர், உண்ணாமலை, சுசிலா, கலியமூர்த்தி உள்ளிட்டோரை வெட்டி உள்ளனர். இதன்பிறகு நால்வரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Next Post

புதிய படத்தில் கமிட்டான பிக்பாஸ் மகேஸ்வரி..!! யாருடைய படம் தெரியுமா..? வெளியான அப்டேட்..!!

Tue Jun 13 , 2023
கடந்த 2007ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகிய அசத்த போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் மகேஸ்வரி. அந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர், சின்னத்திரை மற்றும் சில வெள்ளித்திரை படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். வாய்ப்புகள் கிடைத்தபோது திடீரென்று இனி சினிமாவிற்குள் வரமாட்டேன் என சாணக்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று மீண்டும் சினிமா பக்கம் வந்தார். […]

You May Like