fbpx

#கள்ளக்குறிச்சி : இன்று முதல் கனியாமூர் தனியார் பள்ளி திறப்பு!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி சந்தேகமான முறையில் மரணம் அடைந்தார். இதையடுத்து பள்ளியின் முன்பு நடத்தப்பட்ட போராட்டம் கலவரமாக மாறியது. பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளியின் உடைமைகளை சூறையாடி, பள்ளி பேருந்துகள், முக்கிய ஆவணங்களை தீயிட்டு எரித்தனர். இந்தக் கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது.

இந்நிலையில், பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதாகவும், அரசு அமைத்த குழுவும் ஆய்வு செய்துவிட்டதால், பள்ளியைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று பள்ளி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகளை நடத்த, சோதனை அடிப்படையில் ஒரு மாத காலத்திற்கு நேரடி வகுப்புகளை நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டது.

மேலும் டிசம்பர் 5 முதல் நேரடி வகுப்புகளை தொடங்கலாம் என்றும் உத்தரவிட்டது. குறிப்பாக, பள்ளியில் உள்ள ‘ஏ’ மற்றும் ‘பி’ பிளாக்குகளை பயன்படுத்தலாம் என்றும் ஆனால், ‘ஏ’ பிளாக்கில் விடுதி இயங்கி வந்த 3-ஆவது மாடியை பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டது. மேலும் விடுதி அமைந்துள்ள தளத்தை மாவட்ட நிர்வாகம் சீல் வைக்க வேண்டும். மேலும் தீவைப்பில் மிகுந்த சேதமடைந்த ‘சி’ மற்றும் ‘டி’ பிளாக்குகளை பயன்படுத்தக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

எல்.கே.ஜி. முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார். கனியாமூர் பள்ளியைத் திறப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை, காவல்துறை, மாவட்ட நிர்வாகம் எதிர்ப்பு தெரிவிக்காததையடுத்து பொதுத்தேர்வை எதிர்நோக்கியுள்ள மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் கனியாமூர் தனியார் பள்ளி செயல்படுகிறது.

Kathir

Next Post

ஆவினில் பால் தட்டுப்பாடா..? அமைச்சரே சொன்ன அதிர்ச்சி தகவல்..!! மக்களே கவனம்..!!

Mon Dec 5 , 2022
ஆவினில் பால் தட்டுப்பாடு என்பது தவறான தகவல் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் விளக்கம் அளித்துள்ளார். அண்மையில் ஆவின் பால் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்வீட் ஒன்று செய்திருந்தார். அதில், ஆவின் பச்சை நிற பால் தட்டுப்பாடு எனவும் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் ஆரஞ்சு நிற பாலின் விலையை குறைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்து பதிலளித்த அமைச்சர் நாசர், ”ஆவின் பச்சை நிற பால் தட்டுப்பாடு […]

You May Like