fbpx

’கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பன்றியை வளர்க்கிறார்’..!! ’காலில் விழுந்துவிட்டார்’..!! கடுமையாக விமர்சித்த சுசித்ரா..!!

பிக்பாஸின் ஓனர் கமல்ஹாசன் இல்லை. அவரே இந்த வாய்ப்பை விஜய் டிவியின் காலில் விழுந்துதான் வாங்கி இருக்கிறார் என பாடகி சுசித்ரா கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிக்பாஸ் 7-வது சீசன் ஆரம்பித்ததில் இருந்தே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. வழக்கம் போலவே, இந்த சீசனிலும் கமல் மீது குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கிறது. அவர் பிரதீப் விஷயத்தில் ரெட் கார்டு கொடுத்தது தவறு, நிக்சன் பெண்களை பாடி ஷேமிங் செய்ததைப் பற்றி விசாரிக்கவில்லை, மாயாவுக்கு அவர் நிறைய சுதந்திரம் கொடுக்கிறார் என்பது போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.

இந்நிலையில், பாடகியும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான சுசித்ரா தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றியும் கமல் பற்றியும் கடுமையான குற்றச்சாட்டுகளை தனது சமீபத்திய பேட்டிகளில் கூறியிருக்கிறார். அந்த வகையில், அவர் தனது சமீபத்திய பேட்டியில், “கமல் ஒன்றும் பிக்பாஸ் ஓனர் கிடையாது. விஜய் டிவி காலில் விழுந்து அவருக்கு வாங்கிக் கொண்ட வாய்ப்பு இது. அவர் மக்கள் நீதி மய்யம் என்ற பன்றியை வளர்க்கிறார். அதை வைத்துக் கொண்டு வருகிற தேர்தலில் எல்லாம் அவர் வெற்றிப் பெற முடியாது” எனக் கடுமையாகப் பேசியுள்ளார்.

Chella

Next Post

ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள்..!! சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றம்..!!

Sat Nov 18 , 2023
தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று கூடிய நிலையில், ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. முந்தைய அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள், தற்போதைய திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்கள் என மொத்தம் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்திவைப்பதாக குறிப்பிட்டு, அதனை ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த 13ஆம் தேதி திருப்பி அனுப்பினார். இதில், பல்கலைக்கழக வேந்தர்களாக முதலமைச்சரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே, […]

You May Like