விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து புகழடைந்தவர் கிரண். அவர் அந்த தொடருக்கு பிறகு நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று கொண்டார். மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் பலரும் தற்சமயம் சினிமா துறைக்குள் நுழைந்திருக்கிறார்கள்.
ஒரு காலத்தில் விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது கனாக் காணும் காலங்கள் தொடர். அந்த தொடரில் நடித்திருந்தவர் தான் இந்த கிரண்.
ஆனால் வெகு சில நாட்களே ஒளிபரப்பான அந்த தொடர் திடீரென்று சில காரணங்களால் நிறுத்தப்பட்டது.ஆனால் தற்சமயம் மீண்டும் கனா காணும் காலங்கள் தொடர் ஆரம்பமாகி விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இதற்கு நடுவே டான்ஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்று கொண்டு தற்சமயம் சினிமா துறையில் இருந்து வருபவர்தான் நடிகர் கிரண். அவர் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
தற்சமயம் அவருக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டிருக்கிறது அவர் தன்னுடைய எதிர்கால மனைவிக்கு மோதிரம் அணிவிக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.மஞ்சுஷா கரமாலா என்ற பெண்ணை அவர் திருமணம் செய்து இருக்கிறார் தற்சமயம் கிரணுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றனர்.