fbpx

10ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு……! தண்டவாளத்தில் கிடந்த சடலம்…..! போலீசார் கைப்பற்றிய முக்கிய கடிதம்….!

கன்னியாகுமரி மாவட்ட எல்லை பகுதியான களியக்காவிளை அருகே இருக்கின்ற பரசு வைத்தல் பகுதியில் இரயில் தண்டவாளத்திலிருந்து பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் சடலமாக மீட்க்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், கொல்லங்கோடு அருகே இருக்கின்ற ஊரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் – அக்‌ஷால் தம்பதியின் மகள்தான் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரிய வந்தது. இவர் பளுகால் மேல்நிலைப் பள்ளியில் இந்த வருடம் தான் 10ம் வகுப்பில் புதிதாக சேர்ந்து இருக்கிறார்.

நாள்தோறும் பேருந்தில் பள்ளிக்கு செல்லும் இந்த மாணவி, திடீரென்று இது போன்ற ஒரு விபரீத முடிவை மேற்கொண்டுள்ளார் அதோடு காவல்துறையினர் நடத்திய சோதனையில், அவரது பையில் ஒரு கடிதம் கிடைத்திருக்கிறது. அதில் அவருடைய தாயின் செல் போன் என்னை எழுதி வைத்து என்னுடைய சடலத்தை ஒப்படைத்து விடுங்கள் என்று எழுதியிருக்கிறார் அந்த மாணவி.

அவர் தற்கொலை தான் செய்திருக்கிறார் என்பதை உறுதி செய்த காவல்துறையினர், அதற்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

கோவில் முதல் மரியாதை விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு…..! அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ வீட்டில் 5️ லட்சம் ரூபாய் ரொக்கம் 5️ சவரன் நகை திருட்டு அதிமுக தலைமை கடும் கண்டனம்……!

Wed Jun 28 , 2023
மதுரை மாவட்டம் எம் சத்திரப்பட்டி அருகே உள்ள கருவானூர் கோவில் திருவிழாவில் முதல் மரியாதை பெறுவதில் அதிமுகவின் முன்னாள் சட்டசபை உறுப்பினர் பொன்னம்பலம், திமுகவின் கிளை செயலாளர் வேல்முருகன் உள்ளிட்ட இரு தரப்பினருக்கு இடையே பிரச்சனை எழுந்தது. இது குறித்து இருதரப்பினரும் ஒருவரை, ஒருவர் தாக்கி கொண்டனர். அதன் ஒரு பகுதியாக கருவானூரில் இருக்கின்ற முன்னாள் சட்டசபை உறுப்பினர் பொன்னம்பலத்தின் வீட்டுக்குள் வேல்முருகன் தரப்பினர் புகுந்து தாக்குதல் நடத்தி அங்கிருந்த […]

You May Like