fbpx

CBI-யின் புதிய இயக்குனராக பிரவீன் சூட் நியமனம்…! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!

சிபிஐயின் புதிய இயக்குனராக கர்நாடகா மாநில தலைமை காவல் அதிகாரி பிரவீன் சூட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக கேடரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான பிரவீன் சூட், மத்திய புலனாய்வுப் பிரிவின் இயக்குநராக உயர்மட்ட தேர்வுக் குழுவால் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது கர்நாடகாவில் காவல்துறை தலைமை இயக்குநராக பணியாற்றுகிறார், பிரவீன் சூட் தனது பணியில் அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் கொண்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர், அடுத்த சிபிஐ இயக்குநராக சூட்டை நியமிப்பதற்கு ஒருமனதாக ஒப்புக்கொண்டனர். சனிக்கிழமை மாலை நடைபெற்ற கூட்டத்தின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சிபிஐ இயக்குநரான சுபோத் குமார் ஜெய்ஸ்வாலின் பதவிக்காலம் மே 25ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் பிரவீன் சூட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Vignesh

Next Post

சாதனை‌..! ஆசிட் வீச்சில் உயிர் பிழைத்த மாணவி CBSE 10-ம் வகுப்பு தேர்வில் 95.02 சதவீத மதிப்பெண் எடுத்து முதலிடம்...!

Mon May 15 , 2023
ஆசிட் வீச்சில் உயிர் பிழைத்த மாணவி சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வில் 95.02 சதவீத மதிப்பெண்கள் பெற்று தனது பள்ளியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். காஃபி (Kafi) என்ற அந்த பெண் தனது 3 வயதில் , பொறாமையின் காரணமாக அக்கம்பக்கத்தினர் அவளை ஆசிட் வீசி தாக்கினர், அதன் பிறகு அவள் முகம் முழுவதும் எரிந்து 6 ஆண்டுகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், இதனால் அவருக்கு கண்ணில் […]

You May Like