fbpx

கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை..!

கனடாவின் வின்னிபெக்கில் அடையாளம் தெரியாத நபர்களால் கேங்ஸ்டர் சுக்தூல் சிங் சுட்டுக் கொல்லப்பட்டார். புதன்கிழமை இரவு 2 கும்பகளுக்கு இடையேயான சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ள அர்ஷ் டல்லாவின் கும்பலைச் சேர்ந்தவர் சுக்தூல் சிங். கனடாவில் காலிஸ்தான் இயக்கத்தின் ஒரு பகுதியாகவும் இவர் செயல்ப்பட்டு வந்துள்ளார்.

சுக்தூல் சிங் 2017 ஆம் ஆண்டில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இந்தியாவின் பஞ்சாபிலிருந்து தப்பிச் சென்றார். பஞ்சாப் காவல்துறையின் குண்டர் தடுப்பு பணிக்குழு, அவர் காலிஸ்தான் சார்பு குழுக்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அதில் சேர்ந்ததாகவும் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் ஜூன் 19 அன்று சர்ரேயில் கும்பல்களுக்கிடையேயான போரில் ஈடுபட்ட பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதை ஒத்திருக்கிறது. நிஜ்ஜார் போட்டியாளர்களால் குறிவைக்கப்பட்டார், அவர்கள் அவர் மீது சுமார் 15 தோட்டாக்களை வீசினர்.

Kathir

Next Post

தூங்கிக் கொண்டிருந்தபோது வந்த மெசேஜ்..!! ரூ.9,000 கோடி டெபாசிட்..!! ஆடிப்போன சென்னை கார் ஓட்டுநர்..!!

Thu Sep 21 , 2023
கார் ஓட்டுநரின் வங்கிக்கணக்கில் 9,000 கோடி ரூபாய் பணம் டெபாசிட் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி நெய்க்காரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார் ஓட்டுநர் ராஜ்குமார். இவர், சென்னை கோடம்பாக்கத்தில் நண்பருடன் அறையில் தங்கி வாடகை கார் ஓட்டி வருகிறார். கடந்த 9ஆம் தேதி இவரது செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் இருந்து ராஜ்குமார் வங்கிக்கணக்கில் 9 ஆயிரம் […]

You May Like