fbpx

ஹைதராபாத்தை பொட்டலம் போட்ட கொல்கத்தா!! வெற்றி நடையோடு பைனலுக்குள் நுழைந்தது!

ஐபிஎல் தொடரின் பைனலுக்கு கொல்கத்தா அணி எளிதாக முன்னேறியது. தகுதிச்சுற்று 1ல் ஹைதராபத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தியாவில் 17வது ஐபிஎல் சீசன் நடந்து வருகிறது. நேற்று ‘பிளே ஆப்’ சுற்று துவங்கியது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த ‘தகுதிச்சுற்று-1’ல் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பிடித்த கொல்கத்தா(20), ஹைதராபாத் (17) அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ‘டாஸ்’ வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். ஆனால், ஹைதராபாத் அணி துவக்கத்திலேயே ‘காஸ்ட்லி’ ஸ்டார்க் வேகத்தில் அதிர்ந்தது. இவரது முதல் ஓவரின் 2வது பந்தில் அபாயகரமான ஹெட் (0) போல்டானார். அபிஷேக் (3) விரைவில் அவுட்டானார். ஸ்டார்க் பந்துவீச்சில் நிதிஷ் குமார் (9), ஷாபாஸ் அகமது (0) வெளியேறினர். பின் திரிபாதி, கிளாசன் இணைந்து போராடினர்.

இதனைத் தொடர்ந்து, ஐந்தாவது விக்கெட்டுக்கு 62 ரன் சேர்த்த போது, வருண் சக்ரவர்த்தி சுழலில் கிளாசன் (32) அவுட்டானார். திரிபாதி (55), வீணாக ரன் அவுட்டாக போட்டியில், திருப்பம் ஏற்பட்டது. ஹர்ஷித் ராணா, அப்துல் சமதுவை (16) வெளியேற்றினார். கம்மின்சை (30), ரசல் அவுட்டாக்கினார். ஐதராபாத் அணி, 19.3 ஓவரில் 159 ரன்னுக்கு சுருண்டது. விஜயகாந்த் (7) அவுட்டாகாமல் இருந்தார். கோல்கட்டா சார்பில் ஸ்டார்க் 3, வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட் கைப்பற்றினர்.

கொல்கத்தா அணிக்கு குர்பாஸ் (23), நரைன் (21) ஜோடி வேகமான துவக்கம் கொடுத்தது. பின் இணைந்த கேப்டன் ஸ்ரேயாஸ், வெங்கடேஷ் ஜோடி சிக்சர், பவுண்டரி மழை பொழிந்தது. இருவரும் அரைசதம் கடந்தனர். ஹெட் வீசிய 14வது ஓவரில் முதல் 4 பந்தில் 6, 4, 6, 6 என ஸ்ரேயாஸ் விளாச, கோல்கட்டா அணி (13.4 ஓவர்) 164/2 ரன் எடுத்து வெற்றி பெற்றது. நான்காவது முறையாக பைனலுக்குள் நுழைந்ததுள்ளது கொல்கத்தா. ஸ்ரேயாஸ் (58), வெங்கடேஷ் (51) அவுட்டாகாமல் இருந்தனர். மேலும் சன்ரசைரஸ் ஹைதராபாத் அணிக்கு இன்னொரு வாய்ப்பு உள்ளது. ‘எலிமினேட்டர்’ போட்டியில் வெல்லும் அணியுடன் தகுதிச்சுற்று 2ல் (மே 24, சென்னை) மோத வேண்டும். இதில் வென்றால் பைனலுக்கு முன்னேறலாம்.

Read More: கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களையும் பாதிக்கும் புதிய வேரியன்ட் FLiRT!

Baskar

Next Post

ஆசிரியர்களுக்கான தேசிய விருதுகள் 2024... ஜுன் 20-ம் தேதி கடைசி நாள்...!

Wed May 22 , 2024
ஆசிரியர்களுக்கான (உயர்கல்வி) தேசிய விருதுகள் 2024 பரிந்துரைகளுக்கான இணையதளத்தை உயர்கல்வித்துறை செயலாளர் தொடங்கி வைத்தனர். பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சாரா உயர்கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் மற்றும் பாலிடெக்னிக் நிறுவனங்களின் ஆசிரியர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படும். பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், கட்டடக்கலை; கணிதம், உடல் கல்வியியல், உயிரி அறிவியல், வேதியியல் அறிவியல், மருத்துவம், மருந்தியல், கலை மற்றும் சமூக […]

You May Like