fbpx

விரைவாக பேச்சை முடிக்குமாறு கேட்டுக் கொண்ட சபாநாயகர்….! நகைச்சுவையாக பதில் அளித்த கேபி முனுசாமி சட்டசபையில் கலகலப்பு….!

தமிழக சட்டசபையில் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான 2ம் நாள் விவாதம் வினாக்கள் விடை நேரத்துடன் ஆரம்பமானது. அப்போது நிதிநிலை அறிக்கை விவாதத்தில் யார் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டது? என்ற விவாதம் அதிமுக மற்றும் திமுகவினர் இடையே உண்டானது நீண்ட நேரமாக உரையாற்றிக் கொண்டிருந்த அதிமுகவின் உறுப்பினர் கேபி முனுசாமியை மிக விரைவாக பேச்சை முடிக்குமாறு சபாநாயகர் அப்பாவு கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதில் அளித்த கேபி முனுசாமி உணர்வுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அதனை தவிர்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். மேலும் ஒரு அளவிற்கு தான் அமைதியாக இருக்க முடியும் எனவும் அதற்கு மேல் எதிர்த்து தான் ஆக வேண்டும் என்றும், கூறினார் மேலும் எதிர்த்தால் தான் அதிமுக ஆளுங்கட்சியாக வர முடியும் திமுக எதிர்கட்சியாக வர முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேசிய அவர் திமுகவும் அதிமுகவும் அடித்துக் கொண்டிருந்தால்தான் ஆளுங்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் இருக்க முடியும் எனவும் கேபி முனுசாமி நகைச்சுவையாக கூறினார்.

Next Post

தொடர்ந்து காவு வாங்கும் ஆன்லைன் ரம்மி.. மேலும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால் அதிர்ச்சி..

Sat Mar 25 , 2023
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. ஆன்லைன் சூதாட்டத்தால் பல்வேறு குடும்பங்கள் அழிந்து வருகின்றன. ஆன்லைன் ரம்மியினால்  இலட்சக்கணக்கான பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவில் ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்திலும் கடந்த அதிமுக ஆட்சியில் ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அரசு தடை விதித்தது. ஆனால் […]

You May Like