தமிழக சட்டசபையில் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான 2ம் நாள் விவாதம் வினாக்கள் விடை நேரத்துடன் ஆரம்பமானது. அப்போது நிதிநிலை அறிக்கை விவாதத்தில் யார் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டது? என்ற விவாதம் அதிமுக மற்றும் திமுகவினர் இடையே உண்டானது நீண்ட நேரமாக உரையாற்றிக் கொண்டிருந்த அதிமுகவின் உறுப்பினர் கேபி முனுசாமியை மிக விரைவாக பேச்சை முடிக்குமாறு சபாநாயகர் அப்பாவு கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதில் அளித்த கேபி முனுசாமி உணர்வுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அதனை தவிர்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். மேலும் ஒரு அளவிற்கு தான் அமைதியாக இருக்க முடியும் எனவும் அதற்கு மேல் எதிர்த்து தான் ஆக வேண்டும் என்றும், கூறினார் மேலும் எதிர்த்தால் தான் அதிமுக ஆளுங்கட்சியாக வர முடியும் திமுக எதிர்கட்சியாக வர முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பேசிய அவர் திமுகவும் அதிமுகவும் அடித்துக் கொண்டிருந்தால்தான் ஆளுங்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் இருக்க முடியும் எனவும் கேபி முனுசாமி நகைச்சுவையாக கூறினார்.