மணிப்பூர் மாநிலத்தில் தொடரும் வன்முறை சம்பவம்.. மத்திய உள்துறை அமைச்சர் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இணைய சேவையும் 25 நாட்களுக்கு மேலாக முடங்கியுள்ளது. இம்பால் பள்ளத்தாக்கிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வசிக்கும் மெய்டீஸ் மற்றும் மலைகளில் குடியேறிய குக்கி பழங்குடியினருக்கு இடையே, மெய்டீஸ் பட்டியல் பழங்குடியினர் (ST) பிரிவின் கீழ் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் பேரில் தொடர்ந்து இனக்கலவரம் நடந்து வருகிறது.
மே 3 ஆம் தேதி தொடங்கிய மோதலில் இருந்து 70 க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை, மணிப்பூர் முதலமைச்சர் என் பிரேன் சிங், கலவரங்களால் சூழப்பட்ட வடகிழக்கு மாநிலத்தில் அமைதியைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கையைத் தொடங்கியதில் இருந்து, வீடுகளைத் தீயிட்டுக் கொளுத்துதல் மற்றும் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு ஆகியவற்றில் ஈடுபட்ட கிட்டத்தட்ட 40 ஆயுதமேந்திய போராளிகள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாகக் கூறினார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமைதியை பேணுமாறும், இயல்பு நிலையைக் கொண்டுவர மைதிஸ் மற்றும் குகிஸ் இன மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமித்ஷா என்று மணிப்பூர் செல்ல உள்ளார்.