fbpx

பெண்களே பீரியட்ஸ் தள்ளிப்போகிறதா?… இதய நோய் வருமாம்?… எச்சரிக்கையுடன் இருங்க!

பெண்களின் கருப்பை ஹார்மோன்கள் இனப்பெருக்கத்திற்கு மட்டுமன்றி, அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உறுதுணையாக இருக்கிறது. இனப்பெருக்க நடவடிக்கையில் முக்கிய பங்கு வகிக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் என்பது நரம்பு, எலும்பு மற்றும் இதயநல கட்டமைப்பு ஆகியவற்றின் செயல்பாடுகளிலும் எதிரொலிக்கிறது.

பெண்களின் பருவ வயதில் தொடங்கி, மெனோபாஸ் அடையும் தருணம் வரையிலும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் அளவு மிக முக்கியமானதாகும். ஆனால், மெனோபாஸ் அடைந்த பிறகு இந்த ஹார்மோன் உற்பத்தி நின்று விடும். அத்தகைய சூழ்நிலையில் பெண்கள் வெவ்வேறு வகையான உடல்நல பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும்.

நம் ரத்தத்தில் ஓடும் கொழுப்புகள் படிந்து விடாமல், அவற்றை கடந்து போகச் செய்யும் நடவடிக்கைகளை ஈஸ்ட்ரோஜன் மேற்கொள்ளும். மெனோபாஸ் அடையும் காலத்திலும், மாதவிலக்கு சீரற்றதாக இருக்கும் சமயத்திலும் இந்த ஈஸ்ட்ரோஜன் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏற்படும். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் இல்லாத நிலையில், ரத்தத்தில் உள்ள கொழுப்புகள் ரத்த நாளங்களில் படியக் கூடும். இதனால், ரத்தக் குழாய்கள் சுருக்கம் அடையும். மெனோபாஸ் அடையும் பெண்களுக்கு இந்தப் பாதிப்பு 7 மடங்கு கூடுதலாக இருக்கும்.

ரத்த நாளங்களை ஒருங்கிணைப்பதிலும், அவற்றை சுமூகமாக இயங்க வைப்பதிலும் ஈஸ்ட்ரோஜன் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோல, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களை மையப்படுத்திய பல நடவடிக்கைகள் நம்முடைய ரத்த அழுத்த அளவை நிர்ணயம் செய்கின்றன. ஆக, மெனோபாஸ் அடைந்த பெண்களுக்கு ஹைப்பர்டென்சன் தொடர்புடைய இதயநல பிரச்சினைகள் உண்டாகக் கூடும்.

ஈஸ்ட்ரோஜன் அளவுகள் குறையும் பெண்களுக்கு உடல் பருமன் ஏற்படக் கூடும். இதனால் அழற்சிக்கு எதிரான தன்மை குறையும். இதனால் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆனால், மெனோபாஸ் நிலைக்கு பிறகு இந்த செயல்பாடு பாதிக்கப்படுவதன் காரணமாக நீரிழிவு நோய் ஏற்படும். நீரிழிவு, ஹைப்பர்டென்சன், மிக அதிகமான கொலஸ்ட்ரால், உடல் பருமன் போன்ற பிரச்சினைகள் சீரற்ற மாதவிலக்கு காரணமாக உண்டாகலாம்.

Kokila

Next Post

பெற்றோரின் புகாரை ஏற்காத காவல்துறை..! 13 வயது சிறுமிக்கு கரும்புக்காட்டில் அரங்கேறிய கொடூரம்…!

Mon Nov 20 , 2023
உத்திரபிரதேசம் மாநிலத்தில் 13 வயது சிறுமி கரும்புக்காட்டில் சடலமாக மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். உத்திர பிரதேச மாநிலம் இலக்கம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி சம்பவம் நடந்த தினத்தன்று பள்ளி சென்றவர் வீடு திரும்பவில்லை. இரவு நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் பதற்றம் அடைந்த பெற்றோர் இது தொடர்பாக காவல்துறையிடம் […]

You May Like