fbpx

திருமண வரன் தேடும் பெண்களே உஷார்..!! மொத்தம் 49 பெண்கள்..!! வரதட்சணையாக சொகுசு கார், பைக்..!!

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்யஜித் சமால் (34). இவர், திருமணத்திற்கு வரன் தேடும் வலைதளங்களில் விதவைகள், விவகாரத்தான பெண்களை குறிவைத்து தனது காதல் வலையை விரித்துள்ளார். இதில், சிக்கும் பெண்களிடம் தான் ஒரு போலீஸ் அதிகாரி என்று கூறி அவர்களிடம் நட்பாக பழகத் தொடங்கியுள்ளார். பின்னர், அவர்களை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பணத்தை பெற்றுள்ளார்.

இதில் 5 பெண்களை ஒரே நேரத்தில் திருமணமும் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பின், பணத்தை பெற்றுவிட்டு அவர்களுடன் வாழ மறுப்பு தெரிவித்ததாகக் கூறி 2 பெண்கள் தனித்தனியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஒரே நபர் மீது 2 பெண்கள் வெவ்வேறு நேரங்களில் புகாரளித்ததால், சந்தேகமடைந்த போலீசார், சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, சமாலை கைது செய்ய திட்டமிட்ட போலீஸார், பெண் போலீஸ் அதிகாரியின் தகவல்களை வரன் பார்க்கும் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அதனைப் பார்த்து தொடர்பு கொண்ட சமாலை லாவகமாக பேசி கைது செய்தனர்.

விசாரணையில், காவல்துறையினரே ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. அதாவது, சமால் மொத்தமாக 49 பெண்களுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதில் ஒரு பெண் சுமார் ரூ.8 லட்சம் வரை கடன் பெற்று சமாலுக்கு காரை பரிசாக வழங்கியுள்ளார். வேறொரு பெண் சுமார் ரூ.30 லட்சம் வரை தொழில் தொடங்குவதற்காக சமாலுக்கு கொடுத்துள்ளார். இதையடுத்து, கைது செய்யப்பட்ட சமாலிடம் இருந்து ஒரு கார், விலை உயர்ந்த இருசக்கர வாகனம், ரூ.2.10 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More : ’கல்வி எவ்வளவு முக்கியமோ இதுவும் ரொம்ப முக்கியம்’..!! ’ஆசிரியர்கள் இனியும் இதை பண்ணாதீங்க’..!! அமைச்சர் உதயநிதி அட்வைஸ்..!!

English Summary

In Odisha, police have arrested a man who cheated women and married him and led a luxurious life.

Chella

Next Post

பேரழிவு!. பூமியைவிட்டு மறையும் சந்திரன்!. அடையாளம் காண முடியாத அளவிற்கு காலநிலையை மாற்றும்!

Mon Aug 5 , 2024
Disaster! The moon will disappear from the earth! Changing the climate beyond recognition!

You May Like