fbpx

ரெடியா இருங்க…! 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள்…! வெளியான முக்கிய அறிவிப்பு…!

தீபாவளி பண்டிகைக்காக வெளியூர் செல்பவர்களின் வசதிக்காக கடைசி நேர நேரடி பேருந்து முன்பதிவு தொடங்கி உள்ளது.

நாடு முழுவதும் வரும் 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் வெளியூர்களில் வேலை பார்க்கும் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக, ரயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 16,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் வசிக்கும் வெளியூர் செல்லும் பொதுமக்களுக்கு வசதியாக 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்னும் தீபாவளிக்கு 3 நாட்களே இருப்பதால், சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் அரசு விரைவு பேருந்துகளின் முன்பதிவு 90% நிறைவடைந்துவிட்டது. தற்போது கோயம்பேடு மார்க்கெட், தாம்பரம் மற்றும் பூந்தமல்லி உள்ளிட்ட தற்காலிக பேருந்து நிலையங்களில் கடைசி நேர முன்பதிவு டிக்கெட் கவுண்டர்கள் தொடங்கப்பட்டு சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது.

Vignesh

Next Post

இது போன்ற இடங்களில் கட்டாயம் மாஸ்க்...! இல்லை என்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்...! அரசு புதிய அறிவிப்பு...!

Fri Oct 21 , 2022
தேசிய தலைநகரில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என்று டெல்லி அரசு வியாழக்கிழமை அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், மக்கள் நெரிசலான பொது இடங்களில் முகக்கவசங்களை அணிவதைத் தொடருமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. டெல்லி அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது இடங்களில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கிய உத்தரவை திரும்பப் பெற டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு செய்துள்ளதாகவும், அதை மீறுபவர்களுக்கு ரூ.500 அபராதம் […]

You May Like