தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அடுத்த வாரம் அக்டோபர் 24ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகின்றது. இதற்கு முந்தைய நாள் சனி , ஞாயிறு விடுமுறை ஆகும். 24ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகின்றது. தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை என்பதால் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே வரும் 21ம் தேதி மாலையில் இருந்தே மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு பயணிக்க தொடங்கி விடுவார்கள்.
பயணிகள் கூட்டத்தை கட்டுப்படுத்த சிறப்பு பேருந்துகள் விடப்பட்டுள்ளன. மீண்டும் சென்னைக்கு 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தீபாவளி விடுமுறையில் சென்றவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படக் கூடும் என்பதால் மாணவர்கள் பள்ளி , கல்லூரிகளுக்கு சிரமம் ஏற்படும்.
எனவே தீபாவளிக்கு மறு நாள் 25ம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்க பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளது. எனவே தீபாவளிக்கு மறு நாள் 25ம் தேதி விடுமுறை அளிப்பது பற்றி தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதை நவம்பர் 12ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்து ஈடுகட்டவும் அரசு யோசனை செய்து வருகின்றது. எனவே இது பற்றிய தகவல் ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.