புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 1ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அல்லு அர்ஜுன் நடித்து வெளியான திரைப்படம் புஷ்பா . உலகம் முழுவதும் வெற்றியைக் கொடுத்தது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இந்தியில் வெளியான திரைப்படத்தின் வசூல் ரூ.100 கோடிக்கு மேல் சாதனை செய்துள்ளது. இதனிடையே இரண்டாம் பாகம் வெளியாவது பற்றிய எதிர்பார்பபில் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். இந்நிலையில் புஷ்பா இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 1ம் தேதி தொடங்க உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் திரைப்படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரலில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
புஷ்பா முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்த அல்லு அர்ஜுன் இரண்டாம் பாகத்தில் இருமடங்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இயக்குனருக்கு இரண்டு மடங்கு சம்பளம் வழங்கப்பட உள்ளது. இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விரைவில் இதன் அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முதல் பாகத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்த இப்படத்தில் ஃபகத் பாசில், சுனில், அஜய் கோஷ், மைம் கோபி உட்பட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். சுகுமார் இயக்கிய இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னட உள்ளிட்ட மொழிகளில் வெளியானது . இதே போல இரண்டாம் பாகமும் பல மொழிகளில் வெளியாகும்.