fbpx

தமிழகத்தை ரவுண்டு கட்டும் தேசிய தலைவர்கள்!… மோடியை தொடர்ந்து ராகுல்!… நெல்லையில் இன்று பிரசாரம்!

Rahul gandhi: மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி இன்று தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.

மக்களவை தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் அனல் பறக்கிறது. பிரதமர் மோடி ஏற்கனவே தமிழ்நாட்டில் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறார். மத்திய அமைச்சர் அமித்ஷாவும் இன்று தமிழகத்தில் சூறாவளி பிரசாரம் செய்கிறார்.

இதேபோல மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இன்று தமிழ்நாட்டில் பிரசாரம் செய்கிறார். திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில் தனியார் பள்ளி வளாக மைதானத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி, தென்காசி திமுக வேட்பாளர் ராணி ஶ்ரீகுமார் ஆகியோரை ஆதரித்து ராகுல் காந்தி பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக நெல்லையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கோவையில் இன்றுமாலை முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ராகுல் காந்தி ஒரே மேடையில் பிரசாரம் செய்கிறார். கோவை எல் அண்ட் டி பைபாஸ் செட்டிபாளையம் அருகே பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. கோவை திமுக வேட்பாளர் கணபதி, பொள்ளாச்சி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி உள்ளிட்டோரை ஆதரித்து இரு தலைவர்களும் பிரசாரம் செய்கின்றனர். முன்னதாக பிரதமர் மோடி கோவை மேட்டுப்பாளையத்தில் பிரசாரம் செய்தார். அதற்கு முன்னதாக சென்னை ரோடு ஷோ நிகழ்ச்சி நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

முதலில் தமிழகத்தை காப்பாற்றுங்கள்!... பிறகு இந்தியாவை பாருங்கள்!... ஸ்டாலினுக்கு பிரேமலதா பதிலடி!

Fri Apr 12 , 2024
Premalatha: முதலில் தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுங்கள் முதல்வரே. பிறகு நீங்கள் இந்தியாவை காப்பாற்றலாம் என பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார். நெல்லை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜான்சிராணி ஆதரித்து நெல்லை தச்சநல்லூர் பகுதியில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கேப்டன் மறைந்த போது ஒட்டுமொத்த தமிழகமே […]

You May Like